திங்கள், 2 நவம்பர், 2009

நாலு...., ஐந்து....,ஆறு....


நான் பொதுவாக வெளியூர்க்கு செல்லும் நேரங்களில், இரவு நேரமென்றால் பேருந்திலோ, பகல் என்றால் ரயிலிலோ  முன்பதிவு செய்துதான்  செல்லுவேன். ஆனால் என்ன செய்ய?   (விதி வலியது) திண்டுகலிருந்து கும்பகோணத்திற்கு முன் பதிவு கேட்டாலே ஏற, இறங்க பார்கின்றனர். எனவே வேறு வழியில்லாமல் திருச்சி சென்று மாறி செல்லலாம் என்று திருச்சி வண்டியில் ஏறி இடம் பிடித்து விட்டேன். 

உள்ளே இருந்தவர்கள் எல்லாம் bar இலிருந்து நேரே வந்தவர்கள் போலும், நல்ல (!?!?!?!) வாசனை. விதியை நொந்தவாரே  தூங்கலாம் என்று கண் முடி சிறிது நேரத்தில் "புறப்படடா தம்பி புறப்படடா" என்று தாய் மீது சத்தியம் செய்த hero ஆரம்"பிக்க". (யார் அந்த hero என்று கேட்பவர்கள் முழுதாக படித்துவிட்டு கீழே வரவும்).


"புறப்படுபவர் சாலையில் ஓட்ட வேண்டிய குதிரையை  என் காதுக்குள் ஓட்ட ஆரம்பித்தார். எனக்கோ சரியான கடுப்பு மேலோங்க நான் அதே கடுப்புடன் conductor ஐ அழைத்து சத்தத்தை குறைக்க சொன்னேன். அதற்க்கு அவர் சொன்னார் 

"sound அ குறைச்சா driver தூங்கிடுவார் sir" என்றார்.

அப்புறமென்ன "தூங்கிடுவாரா?  ரொம்ப பயமுறுத்துராங்க்ய்களே என்னையே"   என்றவாரே முழித்திருந்து ஊர் போய் சேர்ந்தேன்.   
----------------------------------------------------------------------------

கூகிள் தேடு பொறியில் நம் வசதிக்காக அந்தந்த இந்திய மாநில மொழியில் தேடும் வசதி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.


நானும் அதிக தமிழ் ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் தேடலாமென்று தமிழ்க்கு மாற்றி முதல் எழுத்தை தட்டச்சு செய்தவுடன் வந்த suggestion களை பார்த்தவுடன் அந்த முடிவை கை விட்டு விட்டேன். நமது மொழி இணையத்தில் எந்தளவுக்கு பயன்படுகிறது என்று நீங்களும் பாருங்களேன். 

முக்கியமான விஷயம் நீங்கள் இதை முயற்சிக்கும் போது உடன் யாரும் இல்லாத நேரத்தை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் நான் பட்ட சங்கடத்தை    நீங்களும் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------

 அந்த தாய் மீது சத்தியம் hero இவர்தான்.





























song bonus... (யான் பெற்ற இன்பம்) 


டிஸ்கி: அதென்னப்பா எல்லாரும் ஒன்.. டூ.. த்ரீ... அப்டின்னு தலைப்பு வைகிறீங்க. நான் கொஞ்சம் வித்தியாசமானவன்..     

1 கருத்து:

விக்னேஷ்வரி சொன்னது…

இரவு நேர அரசுப் பேருந்து பயணங்கள் கொடுமையானவை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.