திங்கள், 21 ஜூன், 2010

நீ...

நீ
இருக்கும் நம்பிக்கையில்தான் 
அமாவசை அன்று நிலவு 
விடுப்பு எடுத்துகொள்கிறது!

நீ 
படிப்பாய் என்றுதான் 
வாரம் தவறாமல் 
வார இதழ்கள் வெளிவருகின்றன!

நீ
இடுவாய் என்றுதான் 
சுண்ணாம்புக்கல் கோலமாவாக 
உடைகிறது!

நீ 
தரும் மணமே 
போதுமென்றுதான் காகித பூ 
மணம் வீசுவதில்லை!

நீ  
காதலிப்பாய் என்றுதான் 
நானும் கூட 
காத்திருக்கிறேன்! 
 .....செ.சுந்தரராஜன்....

கருத்துகள் இல்லை: