புதன், 23 நவம்பர், 2011

இருநூற்றம்பது ரூபாயும், இரண்டு பீரும்

 

"எவ்ளோ மேடம்?"

"2000 ப்பா!"         

"இல்ல மேடம் எங்களுக்கு 1750  தானே,?!"

"ஆமாம் இந்த time ஒரு பேப்பர்க்கு  50 extra ஆகிட்டாங்க, கிளாஸ் க்கு circular வந்திருக்குமே? "
  
அவள் பேசிகொண்டிருக்க இருநூற்றம்பது ரூபாய் மேற்கொண்டு செலுத்த வேண்டும் என்ற வார்த்தை, என் கனவில் இடி விழுந்தது போலிருந்தது.
இப்போது அவனிடம் சென்று பணமில்லை இனொரு நாள் பார்துகொள்ளலாம் என்றால் என்ன சொல்வானென்று தெரியவில்லை.

அவனிடம் அப்போதே சொன்னேன் "மச்சான்! இதெல்லாம் வேண்டாண்டா, நீ வேணுனா போ, நா வரல டா!"

"மச்சி! பீர் அடிகிறதுலாம் இப்போ கூல் ட்ரிங்க்ஸ் சாப்டர மாறி ஆய்டுச்சு, சொம்மா பயமா இருக்குன்னு சீன் போடாத!"
  
கோபால் எப்பவும் இப்படித்தான், அவனிடம் தெரியாமல்  "பீர் எப்டிடா இருக்கும்" என்று  கேட்டது தவறா? இல்லை இன்று வரை பீர் குடிக்காமல் இருந்தது என் தவறா? என்று தெரியவில்லை... அவன் பேசியே என் மனதை மாற்றிவிட்டான் என்று சொல்வதைவிடவும், நான் பீர் குடிக்க அவன் பேச்சினை ஒரு காரணமாக வைத்து கொள்ள என் மனம் அறிவுத்தியது, பின்னர் ஏதானும் பிரச்னை என்றால் இது  ஒரு சிறந்த காரணமாக இருக்கும்... 

"ok  மச்சி! பீரடிக்க எவ்ளோடா செலவாகும்?"  

"சாதாரணமா டாஸ்மாக் ல அடிக்கலாம்ன உனக்கு செரிபட்டுவராது . ம்ம் எதாவது நல்ல பார் க்கு போய்டுவோம், மச்சான்! என்ன ஒரு 250  ரூபா ஆவும்டா!"

"என்னது? ஒரு பீர் 250 ரூபாவாடா?"  

" இல்லடா, ரெண்டு பீர், அப்புறம் எனக்கு யார் தருவா?"

" டேய்! நான் ஒன்னு முழுசா குடிக்கமாட்டேன்டா"

"தெரியும் மச்சி! நீ முடிஞ்சவரைக்கும் அடி மீதி இருந்தா நான் பாத்துக்குறேன்"

"நாயே! உன் கல்யாணத்துக்கு நான் அய்யர் ஆ?, சரி amount  க்கு என்ன பண்றது?"
"அதான் எக்ஸாம் வருதுல, பீஸ் ஒரு 250 ரூபா  ஏத்திட்டாங்கன்னு சொல்லி வாங்குடா, பாத்துக்கலாம்"

"டேய்! வீட்டுல எப்டிடா பொய் சொல்றது? நா சொன்னதே இல்லடா"   

"அப்டினா, பீரடிக்க போறேன்னு சொல்லி கேட்கவேண்டியதுதான?, லூசு குடிகாரன் ஆய்ட்ட அப்புறம் என்ன சொம்மா செண்டிமெண்ட்"

"டேய்! இதெலாம் செரியா வரும்னு எனக்கு தோணல"    

"அதெல்லாம் வரும் டா, சும்மா இருந்த என்ன  உசுபேத்திட்டு இப்ப ஏமாத்திடாத டா, பீஸ் கட்றோம், பீர் அடிக்கறோம், அவ்ளோதான்."  

அவன் சொன்ன மாதிரியே அம்மாவிடம் பீஸ் அதிகமாகிவிட்டது என்று பணம் கேட்டபோது, ஒரு வார்த்தை கூட கேட்காமல் தந்தாள், அப்போதே எனக்கு உண்மையை சொல்லி விடலாம் போல இருந்தது, இந்த பாழாய் போன பீர் கண்முன் ஆடியவுடன் ஒன்று சொல்லாமல் வந்து விட்டேன், இங்கு பணம் செலுத்துமிடத்தில் உண்மையிலே பீஸ் அதிகமாகிவிட்டதை அறிந்தபோது எனக்கு மயக்கமே வந்து விட்டது.நேரே சென்று கோபாலிடம் காட்டு காட்டென்று காட்டிவிட்டு வீட்டுக்கு நுழைந்தேன்.    

அம்மா இல்லை, வெளிய சென்றிருந்தவள் அபோதுதான் வந்தாள் . வந்தவள் நேரே என்னிடம் வந்து 

"இந்தா ராஜா, இந்தா 250 ரூபா" 

எனக்கு தூக்கிவாரி  போட்டது, ஒருவேளை எல்லாம் தெரிந்திருக்குமோ என்றேண்ணியவாறு


"எதுக்குமா? ஏது இந்த பணம்?"

"3000  சீட்டு போட்ருந்தண்டா, எனக்கு விழுந்துச்சு இந்த தடவ, அதுல தான் இது, காலேஜ் போற புள்ள,எதாவது செலவு இருக்கும், திடிர்னு ஒரு செலவு, இல்ல பசிக்குது, யார கேட்கமுடியும்?, அதான் வச்சிக்........."

அவள் பேசிகொண்டிருந்தாள், எனக்கு உடனே ஒரு பீர் அடித்துவிட்டு அவள் மடியில் படுத்து அழ வேண்டும் போலிருந்தது.          



சனி, 14 மே, 2011

நீ - நான்- அலைபேசி!


1)நீ!
"ம்ம்" என்று  அனுப்புவாய் என்று 
எதிர்பார்த்துகொண்டிருகும்போது
"ஹா ஹா" என்று அனுப்பி விடுகிறாய் - "ம்ம்ம்ம்" 
என்று புலம்பி கொண்டிருக்கிறேன் நான்!

2)உன் பெயர் திரையில் வரும்போதெல்லாம் 
சிவந்து விடுகிறது என் பேசி! - வெட்கமோ?
கோபமோ ? நானறியேன்!

3)உன் அழைப்புகளுக்கு நான் ஒலி வைக்கவில்லை
உன் அழைப்புகளின் போது மலர் வாசம் வீசுகிறது
என் பேசியில்!  

4) என் பேசியில் எதையும் 2 முறை அழுத்த வேண்டியிருகிறது 
என்கிறாய் நீ! - உடனே என்னையும் 
அவளிடம் கொடுத்து விடு 
என்கிறது என் பேசி!

5) நேரில் உன் பார்வைகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை
பேசியில் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை!
இருந்தும் உன் கேள்விகளுக்காகவே கிறுக்குத்தனம் செய்கிறது 
மனது!

6) உன்னிடம் பேசிய பிறகு இசை கேட்க முடிவதில்லை 
என் பேசியில்! -  ஏன் என்று கேட்டால்  
இப்போதுதானே அவள் குரல் கேட்டாய்! 
அதைவிட இனிது ஒன்றுமில்லை இந்த இசையில் 
என்கிறது! 



திங்கள், 2 மே, 2011

காதல் தேவதை பதவி!

 

உனக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகும்
வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது என் பேசியில்!

நண்பர்களின் நடுவே நான் நிற்கையில் 
நீ அழைத்தால் மகிழ்ச்சியை விட  மமதை கொள்கிறது மனது!

நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே 
இல்லை உன் பேச்சு வழக்கு!

உன் குழந்தை கோவம் காணவே - நான் 
காதல் குறும்பு செய்கிறேன்!   

உன்னை தேடி வரும்போதெல்லாம் சாலையின் 
இருபுறமும் நீயே தெரிகிறாய்!
காதல் தேவதை பதவிக்கு ஆள் எடுக்கிறார்களாம் 
உன்னை போட்டியிட சொல்லி என் உயிரை எடுக்கிறார்கள்!

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஒரு நாள் ஒரு கனவு...




அதிகாலை 3 மணி...

"என்னடா நேத்து கூப்டியா?"
   
"ஆமா அண்ணே! அப்பாட்ட சொல்லி வண்டி சாவி தர சொல்லுனே!" என்றான் தம்பி.  

"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"

"நிச்சயமா கேட்பாருன்னே".

"சரிடா, பேசி பாக்குறேன்" . 

"சரிண்ணே" .

அன்று இரவு... 


"ப்பா! பா...!"

"ம்ம்! ம்ம்"

 தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"

"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".

"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"

" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"

"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "

"நீ சொல்லித்.... "

"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?    

"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!    

வேண்டாங்க! பயமா இருக்குங்க!  

அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!  

மறு நாள் காலை 3  மணி ...

"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"

"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".     

"சரிண்ணே". ரொம்ப thanksna

குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது  என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!