வெள்ளி, 30 அக்டோபர், 2009

இந்த நாள் அன்று போலில்லையே!

அம்மாவின் அன்பையும்
அப்பாவின் ஐடியாக்களையும்
தம்பியின் மரியாதையையும்
காதலியின் காதலையும்
நான் தவறவிட்ட  காலங்களில்
நான் தவறாமல் பெற்றது
உன்னைத்தான்!

என்னுடன் என் வீடு
இல்லாத நேரங்களிலும்
நீ இருந்திருகிறாய்!

தாயின் கருவில் நான்
இருந்த நேரங்களை விட
உன்னுடன் தெருவில் இருந்த
நாட்கள் பாதுகாப்பானவை
எனக்கு!

நம்  உறவில் குறைகள்
இல்லாத போதும் - நாம்
பரிசளித்துகொண்ட அறைகளை
மறக்கவில்லை நான்! 

மனைவியாலும் பிரிக்க
முடியாத நம் உறவு
அவளின் மரணத்திற்கு பிறகு
நம் பிள்ளைகளால் பிரிக்கப்பட்டவுடன்
    "நண்பா"
என்ற வார்த்தைகள் என்
செவிகளில் கேட்கும் நேரங்களில்
உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகிறது!
..........செ. சுந்தரராஜன்.....


திங்கள், 26 அக்டோபர், 2009

உனக்கென்ன?


என் கனவுகளில் நீ வருவதில்லை
நீயே எனக்கு கனவாகத்தான் 
இருக்கிறாய்!  


உன் பின்னால் வந்த ஆண்களை விடுத்து
மக்கள் தொகை கணக்கிடுவதற்கு
பத்து விரல்களே அதிகம்!


மின்னலை படம் பிடித்ததால் தான்
என் புகைப்பட கருவி கெட்டு விட்டதாய்
நண்பன் சொன்னான்!
நான் உன்னை பற்றி சொன்னேன்!
ஆமாம் நீ கூட ஒரு வகையில்
மின்னல்தானே!


செயற்கை மூளை பொருத்தப்பட்ட
உலகின் முதல் ரோபோ உன்னைத்தான்
தேடிகொண்டிருக்கிறதாம் காதலிக்க!
பாவம் அதற்க்கு தெரியாது
நீ இயற்கை மூளை படைக்கப்பட்ட
ஒரு எந்திரம் என்று!    


உனக்கென்ன நீ பெண்ணாக
பிறந்துவிட்டாய்!
ஆணாக பிறந்திருப்பது
நானல்லவா!
..........செ.சுந்தரராஜன்.......

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! பண்ருட்டி

                   தொடரின் அடுத்த நகரம் பண்ருட்டி, ஏற்கனவே குவிந்த (?!!?!!?) பின்னூட்டங்கள் மற்றும் வோட்டுகளின் எண்ணிகையை கணக்கில் கொண்டு மீண்டும் தொடங்குகிறேன். (உடனே பழைய பதிவுக்கு சென்று வோட்டுகளையும், பின்னூட்டங்களையும் பார்பவர்களுக்கு தமிழ் மறந்து போக கடவது) 
பண்ருட்டி 
                           கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் 97 ஆவது km இல உள்ள நகரம்.இயக்குனர் மன்னிக்கவும் ஒளி ஓவியர் தங்கர் பச்சனின் சொந்த ஊர் (சொல்ல மறந்த கதை உள்ளிட்ட தங்கர் பச்சன் படங்களில் பார்த்திருக்கலாம்). பண்ருட்டியின் வரலாறு சரியாக தெரியாததால் பண்ருடிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பற்றிய வரலாறு இங்கே.
வரலாறு 
                            நான் 4 ஆம் வகுப்பு படித்து(???)கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சில பிரச்சினைகளின் மூலம் எனக்கு பாதுகாப்பு குறைவு என்று கருதிய என் தந்தை இங்கு என் அத்தை வீட்டில் என் படிப்பை தொடர செய்தார். (ஒரு வருடம் மட்டுமே), இது மட்டுமில்லாமல் எந்த விடுமுறையாக இருந்தாலும் (சனி, ஞாயிறு தவிர) இங்கு வந்து டேரா போட்டுவிடுவேன் என்பதால் இவ்வூரின் சந்து, பொந்து எல்லாம் நல்ல பழக்கம்.

  சிறப்பம்சங்கள்
                            பண்ருட்டி என்றதுமே நினைவுக்கு (எனக்கு) வருவது  முந்திரி பருப்புகள், அந்தளவுக்கு இங்கு முந்திரி காடுகளும், முந்திரி தொழில்களும் அதிகம், ஆனால் பண்ருட்டி பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்கள் பலாபழம் இங்கு famous என்று நினைத்து கொண்டிருப்பார்கள், ஆனால் வடலூரும், நெய்வெலியும்தான் பலாபழத்திற்கு புகழ் பெற்றவை. 


  இணையத்தில் பண்ருட்டியின் புகைப்படங்கள் சரிவர கிடைக்கவில்லை, கிடைத்தவரை போட்டுள்ளேன், பொறுத்தருள்க.
 கோவில்கள்    
                                       பண்ருட்டியின் புகழ் மிக்க கோவில்கள் என்று பார்த்தால் 
  1. சோமேஷ்வரர்  திருக்கோவில்
  2. தன்வந்திரி கோவில் (நந்தவனம் கோவில்)
  3. திருவதிகை கோவில் (சிறிது தூரத்தில்)       
                                   திருவதிகை கோவில் புகைப்படம்

மக்கள்
             பண்ருட்டி ஒரு வணிக நகரமென்பதால் இங்கு செட்டியார் மற்றும் மார்வாடி இன மக்கள் அதிகம் உள்ளனர். பெரும்பான்மையோர் சொந்த தொழில் செய்கின்றனர். இங்கு பொற்கொல்லர்களும் நிறைய பேர் உண்டு. மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துகின்றனர் , ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை, நல்ல உழைப்பாளிகள்,  நேர்மையானவர்கள், கோபக்காரர்கள் (நேர்மை தவறும்போது)..
பொழுதுபோக்கு
                               பண்ருட்டியில் மக்கள் கூட இடங்கள் குறைவு என்ற போதும் கோவில்களும் , திரையரங்களும் , காந்தி பூங்காவும் அந்த குறையை சரி செய்கின்றன. அருகிலயே கடலூர் இருப்பதால் நேரமிருந்தால் உடனே silver beach தான்.  
 
நீங்கள் பண்ருட்டி சென்றால் தங்குவதற்கு ஏற்ற இடம் ரங்கா லாட்ஜ் , ஊரின் புகழ் பெற்ற தங்குமிடம், எல்லா நிலையிலும் அறைகள் கிடைக்கும், உங்கள் வசதிகேற்றத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
 மறுபடி சந்திப்போம்.
..............செ.சுந்தரராஜன்.........    

வெள்ளி, 23 அக்டோபர், 2009

மஹாஜனங்களே!எனக்கொரு சந்தேகம்!

                       

   மஹா ஜனங்களே! நானும் ரொம்ப நாளா இத பத்தி பேசணுமுன்னு நினைத்து பின் மறந்து போய்டுவேன்.
                   
                                 அதாவது ஆணியவாதி!பெண்ணியவாதி! அப்டின்னு ரெண்டு group இருக்காங்கனு சொல்றீங்க.இந்த ஆணியம்னா என்ன? பெண்ணியம்னா என்ன? முதல்ல ஆண், பெண் அப்டின்னு ரெண்டு பிரிவு இருக்கா? இல்ல எல்லாம் ஒன்னுதானா? ஏன்னா  இவிங்க அடிச்சிகிரத பாக்கும்போது என்னமோ உலகத்துலேயே ஆண் இனம் மட்டும்தான் இருக்கறதாவும், பெண் அப்டிங்கரவங்கலாம் அந்த இனத்த விட்டு தள்ளி வச்ச மாதிரியும்,   பின் அந்த பதவிய பிடிகிரதுக்காக போராட்டம் பண்ற மாதிரியும் "உரிமைகளை பெறும் வரை ஓயமாட்டோம்!" அப்டினெல்லாம்  கோஷம் போடுறாங்க!
                   
                               முதல்ல இந்த பெண்ணியவாதி ஆளுங்ககிட்ட போவோம். நீங்க பெண் அப்டிங்கரத்தை ஒத்துகிறீங்களா? இல்ல மேல சொன்ன மாதிரி ஆண் அப்டிங்கறது ஒரு  பதவி, அதை  நோக்கி போராடத்தான் போறோம்னு சொல்லுவீங்களா?
  1. ஆண் உங்களை சித்ரவதை பண்றதா சொல்ற காரணங்கள்னு பாத்தா, வீட்டு வேலை செய்ய சொல்றது , அடக்கமா இருன்னு  சொல்றது போன்றவைதான் இருக்க முடியும். இது அடக்கு முறை அப்டின்னா நீங்க உங்க கணவரையோ! அப்பாவையோ வேலைக்கு போயோ, தொழில் செய்தோ வருமானம் கொண்டு வாங்கனு சொல்றது அவங்கள பொறுத்த வரையில் அடக்கு முறையா இருக்கலாம் இல்லையா? (நியாயம்தானே)
  2. பேருந்துகளில் போகும்போது பெண்கள் இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்ததை கண்டித்து ஒரு பெண் சண்டையிடும்போது மன்னிக்கவும் வாக்குவாதம் செயும்போதோ, உரிமைகளை கேட்டு பெறும்போதோ சப்போர்ட் க்கு வர மற்ற பெண்கள், அதே மாதிரி ஒரு ஆண் இருக்கையில் பெண் அமர்ந்தால் ஆண் வாக்குவாதம் செய்யாத பட்சத்தில், அந்த பெண்ணிடம் இருந்து ஆணுக்கு இருக்கையை பெற்று தருவதில்லை. போராளிகளுக்கு இது அழகா? (உண்மைதானே)
  3. ஆணுக்கு பெண் சமம்னும், எங்களுக்கும் எல்லாம் தெரியும்னு சொல்றீங்க! ஆனா ஏதானும் இக்கட்டான சூழ்நிலையில் ஆண்களிடம் சார் ladies தனியா இருக்கோம். help பண்ணுங்க அப்டின்னு கேட்பதேன்? நீங்களே கூட செய்து கொள்ளலாம் இல்லையா? (வாஸ்தவம்தானே)
  4. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு கீழானவர்கள் பெண்கள் என்று சொன்னதில்லை. தம்பதியருக்குள் ஏதானும் சண்டை வந்து பெண்களை அடிக்கும் போதோ, திட்டும்போதோ 'போயும் போயும் பொம்பளைகிட்ட போய் உன் வீரத்தை காட்டுறீயே?" அப்டின்னு கேட்டு உங்களை நீங்களே ஏன் தாழ்த்தி கொள்றிங்க. ஏன் வீரமான பெண்கள் இல்லவே இல்லையா? (இருக்கலாம்) 
  5. எங்கயாவது நிற்கும் போது  பெண்கள் queue வில்  உங்கள் ஆண் பிள்ளைகளை ( 12வயது வரை என்று கொள்க) உங்களுடன் சேர்த்து கொள்ள ஆர்வமாயிருக்கும் நீங்கள்  மற்ற பெண்களின் ஆண் பிள்ளைகளை சேர்த்து கொள்ள ஆச்சேட்பம் தெரிவிப்பது ஏன்? (என்ன கொடுமை சார்(மேடம்) இது?)  
  6. இந்த கருத்தை கூறுவதற்காக சகோதரிகள் யாரும் என்னை கோபிக்க வேண்டாம். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று பெரியர்வகள் கூறியது சிந்திக்க தக்க ஒன்றுதான்.இதை நீங்களே பல இடங்களில் கண் கூடாக பார்க்கலாம்  (யா!யா!).
  7. உங்களுக்கு பெண் என்று  தாழ்வு மனப்பான்மை அதிகமோ என்று யோசிக்கும்படித்தான்   இருக்கிறது உங்கள் போராட்டங்களுக்கான காரணங்கள் எல்லாம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது. நீங்கள் பெண்களாக இருக்கும் வரைதான் உங்களுக்கு இப்பெருமை.
இறுதியாக ஆண்களுக்கு "அண்ணனுங்களா! நமக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, விட்டு கொடுத்துவிட்டு போய்ட்டே  இருக்கலாம். ஏன்னா நமக்கு குயந்தை மனசு." (பெண்கள் யாரும் "ஏன் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டமா?" என்று சண்டைக்கி சாரி! சாரி! வாக்கு வாதத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறது)
......................கருத்து கந்தசாமி ...........
         
                        

வியாழன், 22 அக்டோபர், 2009

இதுதான் சரியான நேரம்!

              இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம் (நீங்க கேட்கலனா கூட நான் சொல்லுவேனே). தமிழ் வலை பதிவு உலகத்தில் ஏறத்தாழ அனைவரும் அந்த படத்தை பற்றி நல்ல விதமாகவும் , கேவலமாகவும், விமர்சித்தும்   பேசியபோது கூட நான் அந்த படத்தின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
(சரி! எழுதவில்லை).இப்போது அந்த படத்தை பற்றிய கருத்துகள் குறைந்ததே இந்த பதிவெழுத சரியான நேரம்.


             அது எந்த படம்? என்று நீங்கள் கேட்கலாம், ஆனாலும் நான் எப்படி சொல்லுவேன்? சொல்லாததுதானே இந்த பதிவை போடுவதற்கு அடித்தளம். கெட்ட வார்த்தையில் என்னை திட்டிவிட்டு நீங்கள் செல்ல நினைக்கலாம், இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் நான் இந்த பதிவு போட காரணம், நான் அந்த படத்தின் கதாநாகயனின் தீவிர ரசிகன்.(ரசிகன் என்றதும் விஜய் என்று நினைத்து கொள்ளாதீர்கள்)
             என்ன பதிவு போடலாம் என்று யோசித்தபோது   அந்த படத்தை பற்றி எழுதாதையே ஒரு பதிவாக எழுதிடலாம் என்று சிந்தித்ததின் பலன்தான் இந்த மொக்கை பதிவிற்கான அடித்தளம் (என்னது மறுபடியும் முதலேர்ந்தா?) .
            அது என்ன படமாக இருக்கும்  என்று நீங்கள் பின்னுட்டங்களில்
(ம்! ம்! பின்னுட்டங்கள் வாங்க எவ்வளோ செய்ய வேண்டி இருக்கு(அப்படியே போட்டுட்டாலும்!)) சொல்லலாம்.

 டிஸ்கி:தலிவர் படத்தை பத்தி எப்படியாவது எழுதுவோமில்ல (இருக்குஆனா இல்ல)   

 

புதன், 21 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 2

அப்பாடா! ஒரு வழியா எல்லா ஆணிகளும் முடிந்து விட்டன. பதிவிற்கு செல்லும் முன் வோட்டு போட்ட அனைவருக்கும் நன்றி!
 திரையரங்கங்கள்    
                                     எங்கள் ஊர்(அடப்பாவி இப்பதாண்டா எங்க ஊர்னு சொல்லி இருக்க) மக்களுக்கு திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வம்    திரையரங்கங்கள்  மீது கிடையாது. இந்த விஷயம் எனக்கு மற்ற ஊர்களுக்கு சென்று திரைப்படங்கள் பார்க்கும் வரை உரைக்கவில்லை. மற்ற ஊர்களின்  திரையரங்கங்கள் உடன் ஒப்பிடும்போது இங்கே பராமரிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்.
கல்வி
                   கல்வியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல! எல்லா விதமான பள்ளிகளும் இங்கே உண்டு, அவரவர் வசதிக்கேற்ப பயன்பெறலாம்.
ஹி! ஹி
                  எனக்கு தெரிந்த வரையில் பெண்கள்(figures) எல்லா ஊர்களிலும் அழகாகவே  இருக்கின்றனர். ஆனாலும் ஸ்ரீ ரங்கத்திலும், கும்பகோணத்திலும்தான்  தேவதைகளாகவே இருக்கின்றனர்.(சுஜாதாவின்  ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்தவர்கள் அறிவார்கள்.) நீங்கள் இந்த அனுபவத்தை பெற இங்கு வந்தால் மட்டுமே முடியும். ஜாக்கிரதை எங்கள் ஊர் பெண்கள் மிகவும் தைரியசாலிகள்.(கோவிலில் சாமிகளை வணங்குவது போல, தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்வது உத்தமம்!)


 இத்துடன் கும்பகோணம் தொடர் முடிகிறது. அடுத்து எந்த ஊர் என்று உங்கள் யூகங்களை பின்னுட்டங்களில் சொல்லலாம். 

 

புதன், 14 அக்டோபர், 2009

மழை!





மழை!

நனைந்தது வீடு!

எரிந்தது காமம்!

----செ.சுந்தரராஜன் 

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 2 (ஹி! ஹி)

           என்ன அதிசயம் பாருங்க நான் இந்த பதிவுல எனக்கு பிடுங்க வேண்டிய ஆணிகள் மிக குறைவு அப்டின்னு போட்ட நேரம், ஒரே ஆணிகளாக குவிந்து கிடக்கிறது, நான் மட்டுமே பிடுங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டுள்ளேன் (sweet லாம் செய்ய ஆரம்ப்சிடாங்க, நமக்கு சாப்பிடற வேலை இருக்குலா).  எனவே இன்று கும்பகோணம் - 2 தொடர் எழுத முடியாத அளவுக்கு நிறைய வேலை செய்து கொண்டிருப்பதால் , தொடர் மீண்டும் அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை முதல் தொடரும். இதுக்கு நீ பதிவே போட்டிருக்கலாம்னு  சொல்றது எனக்கும் கேட்குது (உடனே உங்க head phone ஐ கழட்டாதிங்க). என்ன பண்றது இப்டியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இந்த மாதிரி டெம்ப்ளட் பதிவு ஒன்னு ஆயத்தமா வச்சிருந்தேன்.
            நண்பர்கள் அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
                 என் பதிவை எதிர்பார்த்து காத்திருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.(அது எப்படிரா யாருமே உன் பதிவை படிக்கலனாலும், ஏதோ ஒரு 1000 பேர் படிக்கிற மாதிரியே எழுதுற? அது நா specialty kick க்கு )    
மீண்டும் நண்பர்கள் அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


 
                       

செவ்வாய், 13 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 1

முதலில் இத்தொடருக்காக ஓட்டு பதிவு அனைவருக்கும் நன்றி! வாங்க பயணத்தை ஆரம்"பிக்கலாம்"....

கும்பகோணம் 
                                 எனது சொந்த ஊர் கும்பகோணதிலிருந்து 3 km தொலைவில் (தம்பி 3km ங்கறது தொலைவு இல்ல, கிட்ட) உள்ள கொரநாட்டு கருப்பூர் (கோலங்கள் serial ல கூட ஒரு தடவை காமிச்சாங்க)  அப்டிங்கற நல்ல வளர்ச்சியடைந்த (என்ன 190 cm இருக்குமா?) எல்லா வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு அருமையான கிராமம். ஆனா நாம இங்க நகரங்களை பற்றி மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்திருப்பதாலும், கும்பகோணம் பற்றிய தகவல்கள் நிறைய இருப்பதாலும்...

வரலாறு 
                                 இப்ப எல்லாரும் கலி முத்திடுச்சு, கலி முத்திடுச்சு அப்படிங்கராங்களே அதே மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவோ ஒரு தடவை இப்படித்தான் கலி முத்திடுச்சாம், உடனே நம்ம சிவபெருமான் கோபம் வந்து நீர் முலமா இந்த உலகத்தை அழிசிட்டராம், அப்பறம் கோபமெல்லாம் குறைஞ்சு மறுபடி உலகத்தை உருவாக்குரத்துக்காக (அவருக்கும் பொழுது போகணுமில்ல) ஒரு கும்பத்தில (கலசம், இப்பயும் புரியலனா குடம்) தன்னோட உயிரணுக்களை வைத்து அந்த நீரில் மிதக்க விட்டராம், அப்புறம் அது சரியான இடத்திற்கு வந்ததும் ஒரு வில்லில் அம்பை வைத்து அந்த குடத்தை பார்த்து விட்டராம், உடனே அந்த குடம் உடைஞ்சு உள்ள இருக்குற உயிரணுக்கள் எல்லாம் நீரில கலந்து உயிரினங்கள்(அமீபா?) எல்லாம் மறுபடி தோன்ற ஆரம்பிச்சுச்சாம், அந்த குடத்தை சிவபெருமான் உடைத்து உயிர் உருவாக செய்த இடம்தான் இன்று குடந்தை எனப்படும் கும்பகோணம் (கும்பம் கோணலாக இருந்ததால் கும்பகோணம்)


 சிறப்பம்சங்கள்  
  (i)மகாமகம் 
                              கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது மகாமகம்  (மகாமக குளத்தின் அமைப்பே கலச குடத்தின் அமைப்பில்தான் இருக்கும்). 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இக்குளத்தில் குளித்தால் நாம்  செய்த பாவங்களெல்லாம் போய் விடும் என்பது ஐதிகம் (அதுக்கு பிறகு செய்ற பாவங்கள என்ன பண்றதுனெல்லாம் கேட்கக்கூடாது).இப்போதான் 2002 ல் வந்தது இனிமேல் 2014 ல் வரும். முடிந்தால் வாருங்கள். 

 மகாமக குளம் சில புகைப்படங்கள்  















(ii)கோவில்கள் 
               கும்பகோணம் என்பது temple சிட்டி (கோவில்களின் நகரம்)  என்ற அடைமொழியாலும் அழைக்கப்படுகிறது.அந்தளவுக்கு திரும்பிய இடமெல்லாம் சிறியது முதல் பெரியது வரையிலான கோவில்கள் நகரை அழகுப்படுதுகின்றன. கும்பகோண முக்கிய கோவில்களின் பட்டியல்.
  1. ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்
  2. சாரங்கபாணி பெருமாள் கோவில் 
  3. சக்கரபாணி திருக்கோவில்
  4. நாகேஸ்வரர் கோவில் 
  5. சோமேஸ்வரர் கோவில் 
  6. காளஹஸ்திஷ்வரர்  கோவில்
  7. ஐராவதிஸ்வரர் கோவில் 
  8. பட்டிச்வரம் துர்கை அம்மன் கோவில் 
இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்(இதுக்கே கண்ணை கட்டுதே)...
சில கோவில்களின் புகைபடங்கள் இதோ
1.ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்

2.சாரங்கபாணி கோவில்  







  
இன்னும் நிறைய படங்கள் இருந்தாலும் இவையிரண்டும் முக்கியமானவை ,மற்ற கோவில்களை நீங்களே கூட தேடி பார்க்கலாம். பாலகுமாரனின் "பாகசாலை" என்ற புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
 (iii) மக்கள்
                     இங்கு எல்லாவகையான மக்களும் பரவி  இருந்தாலும், பிராமணர்கள் அதிகம். மக்களுக்குள் வேற்றுமை கிடையாது, அன்பானவர்கள்,அதிகம் பேசுபவர்கள் , அப்பாவிகள், பொழுது போக்கு விரும்பிகள், ஆனால் இங்கு கோவில்களையும், மகாமக குளத்தையும் தவிர  மக்கள் கூடுமளவுக்கு பெரிய இடங்கள் குறைவு. வணிகம் செய்வர்களும் உண்டு.
  (iv) பொருளாதாரம்    
                      பொருளாதராத்தை பொறுத்தவரையில் ஒன்றும் குறைவில்லை, பெரும்பான்மையான மக்கள் தன்னிறைவு அடைந்தவர்கள்தாம். சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயம் மூலம் தானியங்கள் எளிதில் கிடைப்பதால் no prpblem. காவேரி ஆறு ஓடுவதால்(????) தண்ணீர் பிரச்சினையும் கிடையாது. 
             

         நான் ஏதோ ஒரு பதிவில நம்ம ஊரை பற்றி சொல்லிவிடலாம்னு நினைத்திருந்தேன், எழுத, எழுத ஏதோ ஒன்றை விட்ட மாதிரியே இருக்கு, எனவே நாளைக்கும் கும்பகோணம்தான்.
           நாளைக்கி சில பல முக்கியமான
"அம்சங்கள்" (ஹி! ஹி!)  பற்றி பாக்கலாம். 
அதுக்கு முன்னாடி படிச்சோமா, போனோமான்னு இல்லாம தமிழிஷளையும், தமிழ்மனத்திளையும் மறக்காம வோட் போடுட்டு போங்கோ!

திங்கள், 12 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்!

பயணம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத(கூடாத) ஒன்று. நான்இன்றைய வரையில் நான் சென்று வந்த சில நகரங்களை (த்தோடா! இவரு கிராமத்துக்கு போவவே மாட்டாரு) பற்றிய சில பல சுவாரசியமான   (அத நாங்கசொல்லணும்) தகவல்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர் பதிவாகபோடலாமென்று இருக்கிறேன்(நாராயணா!இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா). உங்களிடம் இருந்து வரும் ஆதரவை பொறுத்து எழுதவதை பற்றிமுடிவு செய்ய வேண்டும்(இல்லனா மட்டும் இவரு விடர போறாரு).

அதற்க்கு முன் இத்தொடர் பற்றி சில:

  1. இத்தொடர் முழுதும் தமிழகத்தின் நகரங்கள்(நீ போய்ட்டு வந்த  நகரங்கள்னுசொல்லு)பற்றி மட்டுமே .
  2. நீ எதுக்கு அந்த ஊருக்கு போன என்பது போன்ற கேள்விகள் தடை செய்யபடுகின்றன.சொல்வதை படித்து கருத்து மட்டும் சொல்லும் என் போன்ற நல்ல உள்ளங்களை மிகவும் வரவேற்கிறேன்.(நா கோவமா கிளம்பறேன், என்ன பாத்து என்ன வார்த்தை சொல்றான்)
  3. அந்தந்த ஊர்களின் தன்மை, மக்கள், பொருளாதாரம்(மன்மோகன் சிங் உன்னத்தான் தேடுராரம்)போன்றவை பற்றி என்னால் முடிந்தவற்றைஎழுதுகிறேன்.(நைனா figure ங்களை வுட்டுடியே).
  4. தொடர் எழுதுவதால் மற்ற இடுகைகள் குறையும் என கனவு காண வேண்டாம், மற்ற சேவைகளும் தொடரும் ஏன்னா நமக்கு பிடுங்க வேண்டிய  ஆணிகள் மிக மிக குறைவு.
முதலில் எனது ஊரான கும்பகோணம் பற்றி தொடங்குகிறேன்.(அஸ்க்கு புஸ்க்குநாளைக்குதான்)..


பயணத்திற்கு தயாரா?








ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதைகள் விற்பவன்!



அன்றொரு நாள் 
தேவதைகள் விற்பவன் ஒருவன்
என் வீதி வழியே சென்றான்!


அவன் தேவதைகள் என்று 
காட்டிய கூட்டத்தில் நீ மட்டுமே 
என் கண்களுக்கு புலப்பட்டாய்!



நான் உன்னை கேட்டேன்
அவன் 
100 காசுகளும்,அவற்றை எடுத்துச் 
செல்ல கூடையும் கேட்டான்!

நான் உன்னை பார்த்தபடியே 

"என்னிடமேது அவையிரண்டும்?"
என்று கேட்க,


"மீண்டுமொருமுறை தேவதைகள் 
மேல் ஆசை கொள்ளாதே" என்று 
கூறிவிட்டு கிளம்பினான்!

நான் அவனிடம் இருந்த 
உன்னையே பார்த்து கொண்டிருக்க 
அவனுடன் சிறிது தூரம் சென்ற நீ 
என்னை பார்த்து புன்னகையொன்றை 
உதிர்த்தாய்!

அன்று முதல் நீ 
இருந்து கொண்டுதான் இருக்கிறாய்
என்னிடம் உண்மையாகவும்
அவனிடம் பொம்மையாகவும்!   




-----செ. சுந்தரராஜன்

சனி, 10 அக்டோபர், 2009

அய்யா! ராசா!


"may i come in sir?"

"அட!mr. ராஜன் ! வாங்க , வாங்க! என்ன விஷயம்?"என்றார் production engineer.

"sir, இன்னிக்கு எங்க பாட்டியோட முதல் நினைவு நாள், so எனக்கு மதியம் ஒரு 2 hrs permisson வேணும்'.

"அடடா! என்னங்க இன்னிக்கு production எல்லாம் submit பண்ணனுமே , இன்னிக்கு வேற MD வரேன்னு சொல்லிருக்காரு , நீங்க வேணுனா நாளைக்குஎடுத்துக்குட்டு enjoy பண்ணுங்களேன்".

மனதிற்குள் (அடேய்!ரப்பர் வாயா!)"sir! leave போட்டு enjoy பண்ற விஷயமா இது?, கிடைக்கும்னா கிடைக்கும்னு சொல்லுங்க! இல்லனா say no! நான் ஒன்றும் நினைச்சிக்க மாட்டேன்" என்றேன்.

"அதான்ங்க இன்னிக்கு கிடைக்கிறது கஷ்டம், நீங்க வேணுனா நாளைக்..."

"thank you sir",மனதிற்குள் (கேட்கறப்ப permisson கொடுக்க மாட்டான், நாளைக்கி leave போட்டு enjoy பண்றதாம், யார்க்கு வேணும் இவனுங்க leave)" என்றபடியேவெளியில் வந்து ,

"அண்ணே! ஒரு kings கொடுங்க". பற்ற வைத்தேன்.

"அய்யா! ராசா! டீ குடிக்க காசு கொடுயா"என்றபடி நின்றது ஒரு கிழவி.

நான் கடுப்புடன்"வேற, வேற எங்கயாவது பாரு"

"நீ கொடுத்தா கொடு, நான் வேற யார்ட்டயும் கேட்க மாட்டேன்" என்றது அது.

"என்னடா இது வம்பா போச்சு! த்தே! சொல்றேனில்ல, வேற பாரு"

"வுடு sir, கொஞ்ச நேரத்துல அதுவே போய்டும்"கடைக்காரர்.

"ராசா! அப்ப நான் வரட்டுமா "என்றது கிழவி.

"போ, போ"என்று சொல்ல வந்த நான்"பாட்டி என்னை என்னை சொல்லிகூப்பிட்ட?".

"ராசான்னு கூப்பிட்டேன்யா, ஏன் அப்படி கூப்பிட கூடாதா?"

"எங்கே இன்னொருவாட்டி கூப்பிடு"

"ராசா" .

"டீ குடிக்க காசு வேணுமா? எவ்வளோ வேணும்?" என்றேன்.

"ம்ம் 1000 ரூபா கொடு, ஒரு 5 ரூபா இருந்தா கொடுய்யா"

"த்தே கிழவி! உனக்கு ரொம்பத்தான் ஏத்தம், அய்யா எதோ கேட்டா.."

"அண்ணே! இருங்க நான் பாத்துக்கறேன்" என்றேன் கடைக்காரரிடம்.

"இந்தா பாட்டி 10 ரூவா வச்சிக்க'

"அய்யா! ராசா! 5 ரூவா இருந்தா கொடு போதும்"

"என்ட சில்லறை இல்லை, பரவால்ல வச்சிக்க "

"இந்தயா, என்ட இருக்கு சில்லறை"என்று 5 ரூபாய் திருப்பி கொடுத்தது அந்தபாட்டி.

"பாட்டி! ஒரு நிமிஷம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க"என்று காலில்விழுந்தேன்.

"மவராசனா இருயா"என்றுவிட்டு அந்த பாட்டி போக நான் அலுவகத்திற்குள் செல்ல திரும்பினேன்.

எல்லோர் பார்வையும் என் மேல இருக்க நான் யாரையும் கண்டுகொள்ளாமல் அலுவகத்திற்குள் நுழைந்தேன்.

"மச்சான்! treat எப்படா?" என்றபடியே வேகமாக வந்தான் ரமேஷ்.

"எதுக்கு? இப்ப treat"

"உனக்கு இந்த மாசத்திலிருந்து 3500 rs increment"என்றான்.

நான் உடனே ஜன்னல் வழியே தூரத்தில் அந்த பாட்டி போவதை பார்க்க, மழைஆரம்பித்தது.



புதன், 7 அக்டோபர், 2009

அண்ணாமலை remake????


அண்ணாமலை என்ற காலத்தால் அழியாத காவியத்தை அதே இயக்குனர்மீண்டும் ஆறுமுகம் என்ற பெயரில் மறு உருவாக்கம்(remake) செய்துள்ளார். மூலகதையின் சாராம்சம் கெடாமலும், ரசிகனின் நினைவு திறனை கருத்தில்கொண்டும் காட்சிகளை உருவாக்கி ரசிகனின் இதயங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார்.(அப்பதானே இவரோட அடுத்த படத்திற்கு(அந்த நினைப்பு வேறஇருக்கா?) போகாமல் தப்பிக்கலாம்).

பில்லா remake ல் விஷ்ணு வர்தன் சில கதாபாத்திரங்களை மாற்றியமைத்துபுரட்சி செய்தது போல் சுரேஷ் கிருஷ்ணாவும் செய்துள்ளார்.

இயக்குனரின் கற்பனை திறனை பறை சாற்றும் வகையில் அண்ணாமலைக்கும், ஆறுமுகத்திற்கும் உள்ள 10 வித்தியாசங்களை பட்டியல் இடுகிறேன்.
  1. அண்ணாமலையில் ரஜினி கதாநாயகன் , இதில் பரத் என்று ஒருவர்.
  2. அதில் குஷ்பூ. இதில் ப்ரியாமணி.
  3. அதில் தங்கை வைஷ்ணவி.இதில் சரண்யா மோகன்(நான் படத்துக்குபோனதே இவங்களுக்காகதான்)
  4. அதில் ராதாரவி, இதில் ரம்யா கிருஷ்ணன்.(இயக்குனரின் தைரியத்தை நாம்பாராட்டியே ஆக வேண்டும்)
  5. அதில் சரத் பாபு , இதில் ஏதோ ஒரு அமுல் பேபி(பரவாயில்லை, சுமாராகநடிக்கிறார்)
  6. அதில் ரஜினி RayBan கண்ணாடி அணிதிருப்பார், இதில் பரத் எதோ சுமாரான கண்ணாடி.
  7. அதில் ஜனகராஜ், இதில் கருணாஸ் (அவரே தேவலாம்)
  8. குஷ்பூ குளிப்பதை(முழுதாக) ரஜினி மட்டுமே பார்ப்பார், இதில்ப்ரியாமணியை நாமும் சேர்ந்து பார்க்கிறோம்.
  9. முக்கியமான வேறுபாடு அதில் ரஜினி பால்காரர், இதில் பரத் இட்லிவிற்பவர்.(எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)
  10. ரஜினிக்கு வயதான பின்னர் climax, இதில் நமக்கு வயதாவதற்கு முன் climax (என்று நினைக்கிறேன்).
படத்தில் பரத் ஆடுவது, பாடுவது, சண்டை போடுவது , பஞ்ச் dialogue பேசுவது, செண்டிமெண்ட் காட்சிகளில் தான் அழுது நம்மையும் அழவைப்பது என ரொம்ப busy ,பாவம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் விடுங்கள்.

ப்ரியாமணி இதே போல் இன்னும் 2 இல்லை இல்லை 1 படம் நடித்தாலே Oscar award நிச்சயம்(எவ்வளவோ பண்ணிட்டோம்! இதை பண்ணமாட்டோமா?).

கடைசியாக பரத்திற்கு ஒரு எச்சரிக்கை!

நீங்கள் வேண்டுமானால் இன்னொரு ரஜினி ஆவதற்கோ , விஜய் ஆவதற்கோமுயற்சி செய்யுங்கள்.

எங்கள் அண்ணன்

இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" போல்

ஆக முயற்சி செய்வதை கை விட்டு விடுங்கள்.

ஒரு சூரியன்! ஒரு சந்திரன் என்பதை

ஒரே வீரத்தளபதி மட்டுமே இருக்க முடியும்

அது

எங்கள் அண்ணன்


இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்னது படத்து climax ஆ, இவளவையும் கேட்ட பின் இந்த படத்தின் climax பாக்கஉங்களக்கு தைரியம் இருக்கலாம், எனக்கு இல்லை. (எல்லா duet பாடல்களும்முடிந்த பின் theatre ல் நமக்கென்ன வேலை.)






ரத்தத்தின் நிறம் xxx?


விபத்தில் சிக்கி மயங்கி பின்
விழித்தவுடன் மருத்தவமனையில் இருப்பதை
உணர்பவனுக்கும்!

தங்கையின் பிரசவத்திற்கு யார்க்கும்
எளிதாக கிடைக்காத ரத்த பிரிவு
எளிதாய் கிடைத்தவனுக்கும்!

உறவினர்களே அற்ற திருமணத்தில்
மணமகனாய் இருந்தவனுக்கும்!

மழை நேரங்களில் பத்திரமாய்
வீடு திரும்பும் தந்தையின்
மகனுக்கும்!

மச்சான்!நீ என் ரத்தம்டா
என்பவனுக்கும்!

அந்த வார்த்தைகளை கேட்கும்
தகுதியுள்ள எவனுக்கும்!


ரத்தத்தின் நிறம் நட்பு!

------செ. சுந்தரராஜன்


கவிதைனா
காதலை பற்றி மட்டும்தான்(என் வரையில்) எழுதுனுமா என்று
சிந்த்திதற்கு பலன் இந்த படைப்பு. நட்பு என்றும்(எதையும்) கவிதைகளை
எதிர்பார்பதில்லை
என்றாலும், எழுத தோன்றியது!நான் நட்பை பற்றி எழுதிய முதல் கவிதை. யாரேனும்வேறெங்காவது நட்பு பற்றிய கவிதைகளை அறிந்திருந்தால் பின்னூட்டங்களில் சொல்லவும்

செவ்வாய், 6 அக்டோபர், 2009

நண்பா!


வாழ்வின் எல்லா சாபங்களையும் சந்தித்தது போல்
ஒரு வெறுப்பு, பயங்கர கடுப்பு,
ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

நம்ம மேல தான் தப்போ!. என்றெல்லாம்
சிந்தித்தபடி நான் அமர்ந்திருந்த நேரத்தில்
அங்கு வந்த என நண்பன் சொன்ன அந்த 3 வார்த்தைகள்


என் அம்மா சொன்னதை விட பெரியது!

காதலியின் வார்த்தைகளை விட இனியது !

அப்பாவின் ஆறுதலை விட மகிழ்ச்சியானது!

அது !



அது !



அது !


அது !


அது !



மச்சி நானும் பெயில்டா

திங்கள், 5 அக்டோபர், 2009

மச்சி! நீ யார் fan?

முதல் வருட கல்லூரி, முதல் நாள், ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் முடிந்தவுடன் நாங்கள் 5 பேர் ஒரே இருக்கையில் அமர்ந்தோம்.
(ஒரே இருக்கைனா ஒரே desk ).

அவன் பேச ஆரம்பித்தான், 2 ஆவதா இருந்தவனிடம்
"மச்சி! நீ யார் fan? " என்றான்.

"விஜய் மச்சி! ஏன் கேட்குற?" என்றவுடன் .

அவரை பற்றி ஒரு joke சொல்லி அந்த விஜய் ரசிகனை
(விஜய் நடிச்ச ரசிகன் இல்ல,விஜயோட ரசிகன்)
வெறுப்பு ஏற்றினான்.

பிறகு அடுத்தவனிடம் "மச்சி! நீ யார் fan? ".

அதற்க்கு அவன் மிகவும் ""தலை"க்கனத்துடன் (நல்லா கவனிங்க தல இல்லை"தலை") "அஜித்! மச்சி" என்றான்.

அதற்க்கு அவன் சொன்ன joke கேட்டவுடன் விஜயே தேவலாம் என்றாகிவிட்டது.

இப்படி எல்லாரிடமும் கேட்டு எல்லாரையும் கடுப்பாக்கிவிட்டு என்னிடம்வந்தான்.

என்னிடம் "மச்சி! நீ யார் fan? ".

நான் " இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்


நாளை மறுநாளைய உலகம்


அடுத்த அமெரிக்க அதிபர்


வெள்ளை உள்ளம்


டில்லியின் கில்லி


முகவையின் முத்து


தமிழகத்தின் சொத்து


வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்"

என்றேன்.


அவன்"இது உனக்கு தேவையா?"(வடிவேலு style ல்) என்று அவனக்கு அவனே கேட்டு கொண்டுவேறு desk க்கு ஓடிவிட்டான்.


அன்றிலிருந்து அவன் யாரிடமும் கேட்பதில்லை "மச்சி! நீ யார் fan? ".


டிஸ்கி: எப்பேர்பட்ட துன்பம், அவமானம் வந்தாலும்

அண்ணன் ஜே.கே.ரித்திஷ்

பெயரை உச்சரித்தவன் காப்பாற்றபடுவான்.


ஸ்டார்ட் மீஸீக்..

"இருந்தாக்கா அள்ளிக் கொடு

இல்லேன்னா சொல்லிக் கொடு"




இதையெல்லாம் பாக்குறப்போ!


  • கஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..
  • ரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்ப அதிர்ச்சி (எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே!) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், "மச்சி! தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..
  • எல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..
  • சண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...
  • இந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...
  • zip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..
பேசாம மூடிகிட்டு (வாயதான்) நம்ம வேலையவே பாத்திருக்கலாம்னு தோணுதுங்க...(உங்களுக்கும் அப்படித்தானே?)



எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்!

ஒரு காலகட்டத்தில் நான் விவேக் என்றால்
மிகவும்
ரசித்தேன் (ஒரு காலம்தான் இப்ப இல்ல)
அந்தளவுக்கு
அவரின் timing dialogues (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) எனக்கு பிடிக்கும்.
ஆனால் அவரின் நேரம்(ஹீரோ ஆசை(7.30 சனி ) யார விட்டிச்சு?)
நடித்த படங்களிலெல்லாம் ஒரே மாதிரி நடித்ததால் (சரி பேசி கொண்டிருந்ததால்)....

இப்படி இருந்த அவர்...


இப்படி ஆகிவிட்டார் ...




சரி இப்ப என்ன திடீர் விவேக் பாசம் (1.எல்லாரும் மறந்துபோன நேரத்துல?
2.
எவ்ளோ பணம் கொடுத்தார்(பாவம் அவரே அதுக்குதான் கஷ்டபடுறார்,
மறுபடி hero வா நடிக்கனுமில்ல)).
நேற்று ஆதித்யா சேனல் இல் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன், அதுலமனுஷன் நேரத்துல(அதான்பா timing) பூந்து விளையாடிருப்பார்(ஒடனேகொசுவத்தி சுத்தனும்ல).

ஒரு உ. தா(பார்த்திபன் கனவு) தான்

விவேக் மனைவி: உள்ள வாங்க, இன்ப அதிர்ச்சி காத்துட்டு இருக்கு!

விவேக் : ஆஞ! எனக்கு இன்பமா அதிர்ச்சியா இருக்கே!!!

இதோ அந்த படத்திலருந்து சில காட்சிகள்!




பாத்து சூதனமா இருந்துக்குங்க சார் , அப்புறம் கவுண்டர்பெல்(சவுண்டர்)மாதிரி
உங்க dialogue எல்லாம் mobile தான்இருக்கும்


வெள்ளி, 2 அக்டோபர், 2009

அழைப்பு மணி!


சாலையில் கை கோர்த்து செல்லும்
காதலர்களை முன் சென்று பார்க்கிறேன்!
நனறி கடவுளே!
இதில் பெண்ணவள் என்னவள் இல்லை!


தொலைபேசி அழைக்கும்போதும்
அழைப்புமணி ஒலிக்கும்போதும்
வந்திருப்பவர்களுக்காக மகிழாத மனது
வராத உன்னை எண்ணி வருந்துகிறது !


கைபேசி ஒலிக்கும்போது மனது
உன் பெயரை சொல்லும் - ஆனால்
திரை நண்பனின் பெயரை காட்டும்போது
மௌனமாகிறது என்
கைபேசியும்! உதடுகளும்



என்றேனும் நீ அழைப்பாய் என வாங்கிய
கைபேசியும் உன்னிடம் மட்டும் பேசுவது
என்றிருக்கும் என் மனதும் வீணாகிக் கொண்டிருக்கிறது!
அவை இறந்துபோகும் முன்

ஒருமுறையாவது
அழைப்பாயா?


-----செ. சுந்தரராஜன்