திங்கள், 7 செப்டம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும்! - ஒரு பார்வை


இந்த படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க வேண்டும்.படம் நன்றாக இருக்கிறது, ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.(எடுத்திருக்கலாம்).

படத்தில் எனக்கு பெரிய குறையாக தெரிந்தது, ப்ரித்வி, பிரியா காதல், ஏனோ ரொம்ப செயற்கையாக இருப்பது போல் ஒரு பிரமை. எனக்கு ஒரு சந்தேகம் படத்தின் ஹீரோ சக்தி தானோ என்று? சக்தி கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது , அவரின் காதலியாக வரும் அனுஜா அய்யர் அவ்வளவு நன்றாக நடித்தும் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர்!!!
கவலை வேண்டாம் இவர் உன்னை போல் ஒருவன்- லும் இருக்கிறார் , அங்கு பார்த்து கொள்ளலாம் , (ஆனா இவங்க பர்தா போட்டுட்டு வெட்கப்படும் போது சூப்பர்ங்க) .

மற்றபடி பாக்யராஜ் , கார்திக்(எல்லா வேடமும் இவருக்கு பொருந்துகிறது, இவர் ஹீரோவா நடித்திருக்கலாம்), பாலவாக வரும் நண்பன்(அவர் பெயர் தெரியலை) எல்லோரும் நன்றாக செய்து இருக்கின்றனர்.(கவனிக்கவும் சிறப்பாக அல்ல நன்றாக).

படத்தின் சிறப்பம்சங்கள் ஒளிப்பதிவும் , இசையும், அதிலும் பாலசுப்ரமணியெம்மின் கேமரா கண்களுக்கு விருந்தளிக்கிறது, அழகாய் பூக்குதே பாடலில் நம் மனதை உருகுகிறார் விஜய் அன்டோனி.

இயக்குனர் பல இடங்களில் கவனத்தை சிதற விட்டு இருந்தாலும் (ஒரு சண்டைக்காட்சியில் கூட, தண்ணீரில் விழுந்தும் ப்ரித்வியின் முடி நனையவில்லை. இயக்குனர் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார்) , flash back 2000 ஆம் வருடம் என்பதால் செல்போன் பயன்படுத்தாதது,( சில காட்சிகளில் std booth இல் இருந்து பேசுகின்றனர்) தன் புத்திசாலிதனத்தை காட்டி இருக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும் -- காக்டெய்ல் சரக்கு

2 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

ராஜன் சார்,

நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி நினைக்குறோமா?

rajan சொன்னது…

irukkalam sir
நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி நினைக்குறோமா?
ithula ethum ul kuthu illaye?