புதன், 30 ஜூன், 2010

நண்பனும், பதிவராகும் ஆசையும்....

                         நானெல்லாம் பதிவுலகில் நுழைந்ததே நண்பர்களிடம் படம் (scence ) காட்டுவதற்குத்தான், அதில் என்னை போல் ஒரு ஆர்வக்கோளாறு நண்பன் என் வலைப்பூவை மட்டுமே பார்த்துவிட்டு அவனும் வலைப்பூ தொடங்க ஆசை கொண்டான், அதற்க்கு என்னையே கற்று கொடுக்கும் குருவாக ஏற்றுகொள்வதாகவும் ஒப்புகொண்டான்.

                       ஒரு நல்ல குருவிற்கு அழகு நல்ல வழிகாட்டுதல்தானே? உடனே நான் அவனிடம் நீ என்னை மட்டும் படித்துவிட்டு பதிவுலகில் நுழைவதைவிட, என் குருமார்களையும்  படித்து தெளியவேண்டும் என்று கூறி பதிவுலகின் ஆதர்ச நாயகர்களான பரிசல். கார்கி, கேபிள், சரவணகுமரன்  போன்றோரை படிக்குமாறு கூறினேன். 

                      இரண்டொரு நாள் கழித்து வலைப்பூவை தொடங்கலாமா? என்று கேட்க , அவன் இன்னும் அவார்களை படித்து முடிக்கவில்லை என்றும் , இப்போது தனக்கு எழதும் ஆர்வத்தைவிட, படிக்கும் ஆர்வமே அதிகம் உள்ளது என்கிறான். நானும் அவனது படிக்கும் ஆர்வத்தை மெச்சிவிட்டு  அவனிடம் சொன்னேன் " மச்சி!நீ வந்துடேல்ல இனிமே கூவம் சுத்தமாய்டும் ".

                                   







1 கருத்து:

rajan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.