உனக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகும்
வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது என் பேசியில்!
நண்பர்களின் நடுவே நான் நிற்கையில்
நீ அழைத்தால் மகிழ்ச்சியை விட மமதை கொள்கிறது மனது!
நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே
இல்லை உன் பேச்சு வழக்கு!
உன் குழந்தை கோவம் காணவே - நான்
காதல் குறும்பு செய்கிறேன்!
உன்னை தேடி வரும்போதெல்லாம் சாலையின்
இருபுறமும் நீயே தெரிகிறாய்!
காதல் தேவதை பதவிக்கு ஆள் எடுக்கிறார்களாம்
உன்னை போட்டியிட சொல்லி என் உயிரை எடுக்கிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக