அதிகாலை 3 மணி...
"என்னடா நேத்து கூப்டியா?"
"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"
"நிச்சயமா கேட்பாருன்னே".
"சரிடா, பேசி பாக்குறேன்" .
"சரிண்ணே" .
அன்று இரவு...
"ம்ம்! ம்ம்"
தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"
"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".
"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"
" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"
"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "
"நீ சொல்லித்.... "
"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?
"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!
வேண்டாங்க! பயமா இருக்குங்க!
அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!
மறு நாள் காலை 3 மணி ...
"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"
"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".
"சரிண்ணே". ரொம்ப thanksna
குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக