செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஒரு நாள் ஒரு கனவு...




அதிகாலை 3 மணி...

"என்னடா நேத்து கூப்டியா?"
   
"ஆமா அண்ணே! அப்பாட்ட சொல்லி வண்டி சாவி தர சொல்லுனே!" என்றான் தம்பி.  

"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"

"நிச்சயமா கேட்பாருன்னே".

"சரிடா, பேசி பாக்குறேன்" . 

"சரிண்ணே" .

அன்று இரவு... 


"ப்பா! பா...!"

"ம்ம்! ம்ம்"

 தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"

"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".

"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"

" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"

"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "

"நீ சொல்லித்.... "

"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?    

"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!    

வேண்டாங்க! பயமா இருக்குங்க!  

அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!  

மறு நாள் காலை 3  மணி ...

"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"

"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".     

"சரிண்ணே". ரொம்ப thanksna

குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது  என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.

கருத்துகள் இல்லை: