கருத்து கந்தசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்து கந்தசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூலை, 2010

விஜய் டிவியும் , செம்மொழி பாடலும்!

              சென்ற மாதம் முழுதும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்ட செம்மொழி மாநாட்டு  மைய்ய நோக்கு பாடலை கண்டுகளிக்கும் போது , என் அபிமானத்திற்குரிய கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுடய சிந்தனை திறத்தை மெச்சி கொண்டிருந்தேன்.

                இப்போது பிரச்சினை ஒன்றுமில்லை . மாநாட்டு மயக்கமெல்லாம் தீர்ந்த பிறகு ஒரு நாள் விஜய் டிவி பார்த்து கொண்டிருந்த போது அவர்களின் பாடலை ஒளிப்பரப்ப, அதை பார்த்த எனக்கு எங்கோ ஒரு மின்னல் வெட்டியது . அது தற்செயலாகவும் இருக்கலாம்  அல்லது அதிலிருந்து இயக்குனருக்கும் ஒரு மின்னல் வெட்டிருக்கலாம் . அந்த இரு பாடல்களை நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் மின்னல் வெட்டலாம் .

மு.கு: விஜய் டிவி பாடல் செம்மொழி பாடல்க்கு முன்பே எடுக்கபட்டுவிட்டது   .


விஜய் டிவி பாடல்


செம்மொழி பாடல்




திங்கள், 2 நவம்பர், 2009

நாலு...., ஐந்து....,ஆறு....


நான் பொதுவாக வெளியூர்க்கு செல்லும் நேரங்களில், இரவு நேரமென்றால் பேருந்திலோ, பகல் என்றால் ரயிலிலோ  முன்பதிவு செய்துதான்  செல்லுவேன். ஆனால் என்ன செய்ய?   (விதி வலியது) திண்டுகலிருந்து கும்பகோணத்திற்கு முன் பதிவு கேட்டாலே ஏற, இறங்க பார்கின்றனர். எனவே வேறு வழியில்லாமல் திருச்சி சென்று மாறி செல்லலாம் என்று திருச்சி வண்டியில் ஏறி இடம் பிடித்து விட்டேன். 

உள்ளே இருந்தவர்கள் எல்லாம் bar இலிருந்து நேரே வந்தவர்கள் போலும், நல்ல (!?!?!?!) வாசனை. விதியை நொந்தவாரே  தூங்கலாம் என்று கண் முடி சிறிது நேரத்தில் "புறப்படடா தம்பி புறப்படடா" என்று தாய் மீது சத்தியம் செய்த hero ஆரம்"பிக்க". (யார் அந்த hero என்று கேட்பவர்கள் முழுதாக படித்துவிட்டு கீழே வரவும்).


"புறப்படுபவர் சாலையில் ஓட்ட வேண்டிய குதிரையை  என் காதுக்குள் ஓட்ட ஆரம்பித்தார். எனக்கோ சரியான கடுப்பு மேலோங்க நான் அதே கடுப்புடன் conductor ஐ அழைத்து சத்தத்தை குறைக்க சொன்னேன். அதற்க்கு அவர் சொன்னார் 

"sound அ குறைச்சா driver தூங்கிடுவார் sir" என்றார்.

அப்புறமென்ன "தூங்கிடுவாரா?  ரொம்ப பயமுறுத்துராங்க்ய்களே என்னையே"   என்றவாரே முழித்திருந்து ஊர் போய் சேர்ந்தேன்.   
----------------------------------------------------------------------------

கூகிள் தேடு பொறியில் நம் வசதிக்காக அந்தந்த இந்திய மாநில மொழியில் தேடும் வசதி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.


நானும் அதிக தமிழ் ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் தேடலாமென்று தமிழ்க்கு மாற்றி முதல் எழுத்தை தட்டச்சு செய்தவுடன் வந்த suggestion களை பார்த்தவுடன் அந்த முடிவை கை விட்டு விட்டேன். நமது மொழி இணையத்தில் எந்தளவுக்கு பயன்படுகிறது என்று நீங்களும் பாருங்களேன். 

முக்கியமான விஷயம் நீங்கள் இதை முயற்சிக்கும் போது உடன் யாரும் இல்லாத நேரத்தை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் நான் பட்ட சங்கடத்தை    நீங்களும் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------

 அந்த தாய் மீது சத்தியம் hero இவர்தான்.





























song bonus... (யான் பெற்ற இன்பம்) 


டிஸ்கி: அதென்னப்பா எல்லாரும் ஒன்.. டூ.. த்ரீ... அப்டின்னு தலைப்பு வைகிறீங்க. நான் கொஞ்சம் வித்தியாசமானவன்..     

வெள்ளி, 23 அக்டோபர், 2009

மஹாஜனங்களே!எனக்கொரு சந்தேகம்!

                       

   மஹா ஜனங்களே! நானும் ரொம்ப நாளா இத பத்தி பேசணுமுன்னு நினைத்து பின் மறந்து போய்டுவேன்.
                   
                                 அதாவது ஆணியவாதி!பெண்ணியவாதி! அப்டின்னு ரெண்டு group இருக்காங்கனு சொல்றீங்க.இந்த ஆணியம்னா என்ன? பெண்ணியம்னா என்ன? முதல்ல ஆண், பெண் அப்டின்னு ரெண்டு பிரிவு இருக்கா? இல்ல எல்லாம் ஒன்னுதானா? ஏன்னா  இவிங்க அடிச்சிகிரத பாக்கும்போது என்னமோ உலகத்துலேயே ஆண் இனம் மட்டும்தான் இருக்கறதாவும், பெண் அப்டிங்கரவங்கலாம் அந்த இனத்த விட்டு தள்ளி வச்ச மாதிரியும்,   பின் அந்த பதவிய பிடிகிரதுக்காக போராட்டம் பண்ற மாதிரியும் "உரிமைகளை பெறும் வரை ஓயமாட்டோம்!" அப்டினெல்லாம்  கோஷம் போடுறாங்க!
                   
                               முதல்ல இந்த பெண்ணியவாதி ஆளுங்ககிட்ட போவோம். நீங்க பெண் அப்டிங்கரத்தை ஒத்துகிறீங்களா? இல்ல மேல சொன்ன மாதிரி ஆண் அப்டிங்கறது ஒரு  பதவி, அதை  நோக்கி போராடத்தான் போறோம்னு சொல்லுவீங்களா?
  1. ஆண் உங்களை சித்ரவதை பண்றதா சொல்ற காரணங்கள்னு பாத்தா, வீட்டு வேலை செய்ய சொல்றது , அடக்கமா இருன்னு  சொல்றது போன்றவைதான் இருக்க முடியும். இது அடக்கு முறை அப்டின்னா நீங்க உங்க கணவரையோ! அப்பாவையோ வேலைக்கு போயோ, தொழில் செய்தோ வருமானம் கொண்டு வாங்கனு சொல்றது அவங்கள பொறுத்த வரையில் அடக்கு முறையா இருக்கலாம் இல்லையா? (நியாயம்தானே)
  2. பேருந்துகளில் போகும்போது பெண்கள் இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்ததை கண்டித்து ஒரு பெண் சண்டையிடும்போது மன்னிக்கவும் வாக்குவாதம் செயும்போதோ, உரிமைகளை கேட்டு பெறும்போதோ சப்போர்ட் க்கு வர மற்ற பெண்கள், அதே மாதிரி ஒரு ஆண் இருக்கையில் பெண் அமர்ந்தால் ஆண் வாக்குவாதம் செய்யாத பட்சத்தில், அந்த பெண்ணிடம் இருந்து ஆணுக்கு இருக்கையை பெற்று தருவதில்லை. போராளிகளுக்கு இது அழகா? (உண்மைதானே)
  3. ஆணுக்கு பெண் சமம்னும், எங்களுக்கும் எல்லாம் தெரியும்னு சொல்றீங்க! ஆனா ஏதானும் இக்கட்டான சூழ்நிலையில் ஆண்களிடம் சார் ladies தனியா இருக்கோம். help பண்ணுங்க அப்டின்னு கேட்பதேன்? நீங்களே கூட செய்து கொள்ளலாம் இல்லையா? (வாஸ்தவம்தானே)
  4. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு கீழானவர்கள் பெண்கள் என்று சொன்னதில்லை. தம்பதியருக்குள் ஏதானும் சண்டை வந்து பெண்களை அடிக்கும் போதோ, திட்டும்போதோ 'போயும் போயும் பொம்பளைகிட்ட போய் உன் வீரத்தை காட்டுறீயே?" அப்டின்னு கேட்டு உங்களை நீங்களே ஏன் தாழ்த்தி கொள்றிங்க. ஏன் வீரமான பெண்கள் இல்லவே இல்லையா? (இருக்கலாம்) 
  5. எங்கயாவது நிற்கும் போது  பெண்கள் queue வில்  உங்கள் ஆண் பிள்ளைகளை ( 12வயது வரை என்று கொள்க) உங்களுடன் சேர்த்து கொள்ள ஆர்வமாயிருக்கும் நீங்கள்  மற்ற பெண்களின் ஆண் பிள்ளைகளை சேர்த்து கொள்ள ஆச்சேட்பம் தெரிவிப்பது ஏன்? (என்ன கொடுமை சார்(மேடம்) இது?)  
  6. இந்த கருத்தை கூறுவதற்காக சகோதரிகள் யாரும் என்னை கோபிக்க வேண்டாம். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று பெரியர்வகள் கூறியது சிந்திக்க தக்க ஒன்றுதான்.இதை நீங்களே பல இடங்களில் கண் கூடாக பார்க்கலாம்  (யா!யா!).
  7. உங்களுக்கு பெண் என்று  தாழ்வு மனப்பான்மை அதிகமோ என்று யோசிக்கும்படித்தான்   இருக்கிறது உங்கள் போராட்டங்களுக்கான காரணங்கள் எல்லாம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது. நீங்கள் பெண்களாக இருக்கும் வரைதான் உங்களுக்கு இப்பெருமை.
இறுதியாக ஆண்களுக்கு "அண்ணனுங்களா! நமக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, விட்டு கொடுத்துவிட்டு போய்ட்டே  இருக்கலாம். ஏன்னா நமக்கு குயந்தை மனசு." (பெண்கள் யாரும் "ஏன் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டமா?" என்று சண்டைக்கி சாரி! சாரி! வாக்கு வாதத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறது)
......................கருத்து கந்தசாமி ...........