நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2009

இந்த நாள் அன்று போலில்லையே!

அம்மாவின் அன்பையும்
அப்பாவின் ஐடியாக்களையும்
தம்பியின் மரியாதையையும்
காதலியின் காதலையும்
நான் தவறவிட்ட  காலங்களில்
நான் தவறாமல் பெற்றது
உன்னைத்தான்!

என்னுடன் என் வீடு
இல்லாத நேரங்களிலும்
நீ இருந்திருகிறாய்!

தாயின் கருவில் நான்
இருந்த நேரங்களை விட
உன்னுடன் தெருவில் இருந்த
நாட்கள் பாதுகாப்பானவை
எனக்கு!

நம்  உறவில் குறைகள்
இல்லாத போதும் - நாம்
பரிசளித்துகொண்ட அறைகளை
மறக்கவில்லை நான்! 

மனைவியாலும் பிரிக்க
முடியாத நம் உறவு
அவளின் மரணத்திற்கு பிறகு
நம் பிள்ளைகளால் பிரிக்கப்பட்டவுடன்
    "நண்பா"
என்ற வார்த்தைகள் என்
செவிகளில் கேட்கும் நேரங்களில்
உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகிறது!
..........செ. சுந்தரராஜன்.....


புதன், 7 அக்டோபர், 2009

ரத்தத்தின் நிறம் xxx?


விபத்தில் சிக்கி மயங்கி பின்
விழித்தவுடன் மருத்தவமனையில் இருப்பதை
உணர்பவனுக்கும்!

தங்கையின் பிரசவத்திற்கு யார்க்கும்
எளிதாக கிடைக்காத ரத்த பிரிவு
எளிதாய் கிடைத்தவனுக்கும்!

உறவினர்களே அற்ற திருமணத்தில்
மணமகனாய் இருந்தவனுக்கும்!

மழை நேரங்களில் பத்திரமாய்
வீடு திரும்பும் தந்தையின்
மகனுக்கும்!

மச்சான்!நீ என் ரத்தம்டா
என்பவனுக்கும்!

அந்த வார்த்தைகளை கேட்கும்
தகுதியுள்ள எவனுக்கும்!


ரத்தத்தின் நிறம் நட்பு!

------செ. சுந்தரராஜன்


கவிதைனா
காதலை பற்றி மட்டும்தான்(என் வரையில்) எழுதுனுமா என்று
சிந்த்திதற்கு பலன் இந்த படைப்பு. நட்பு என்றும்(எதையும்) கவிதைகளை
எதிர்பார்பதில்லை
என்றாலும், எழுத தோன்றியது!நான் நட்பை பற்றி எழுதிய முதல் கவிதை. யாரேனும்வேறெங்காவது நட்பு பற்றிய கவிதைகளை அறிந்திருந்தால் பின்னூட்டங்களில் சொல்லவும்