கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2009

இந்த நாள் அன்று போலில்லையே!

அம்மாவின் அன்பையும்
அப்பாவின் ஐடியாக்களையும்
தம்பியின் மரியாதையையும்
காதலியின் காதலையும்
நான் தவறவிட்ட  காலங்களில்
நான் தவறாமல் பெற்றது
உன்னைத்தான்!

என்னுடன் என் வீடு
இல்லாத நேரங்களிலும்
நீ இருந்திருகிறாய்!

தாயின் கருவில் நான்
இருந்த நேரங்களை விட
உன்னுடன் தெருவில் இருந்த
நாட்கள் பாதுகாப்பானவை
எனக்கு!

நம்  உறவில் குறைகள்
இல்லாத போதும் - நாம்
பரிசளித்துகொண்ட அறைகளை
மறக்கவில்லை நான்! 

மனைவியாலும் பிரிக்க
முடியாத நம் உறவு
அவளின் மரணத்திற்கு பிறகு
நம் பிள்ளைகளால் பிரிக்கப்பட்டவுடன்
    "நண்பா"
என்ற வார்த்தைகள் என்
செவிகளில் கேட்கும் நேரங்களில்
உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகிறது!
..........செ. சுந்தரராஜன்.....


புதன், 14 அக்டோபர், 2009

மழை!





மழை!

நனைந்தது வீடு!

எரிந்தது காமம்!

----செ.சுந்தரராஜன் 

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதைகள் விற்பவன்!



அன்றொரு நாள் 
தேவதைகள் விற்பவன் ஒருவன்
என் வீதி வழியே சென்றான்!


அவன் தேவதைகள் என்று 
காட்டிய கூட்டத்தில் நீ மட்டுமே 
என் கண்களுக்கு புலப்பட்டாய்!



நான் உன்னை கேட்டேன்
அவன் 
100 காசுகளும்,அவற்றை எடுத்துச் 
செல்ல கூடையும் கேட்டான்!

நான் உன்னை பார்த்தபடியே 

"என்னிடமேது அவையிரண்டும்?"
என்று கேட்க,


"மீண்டுமொருமுறை தேவதைகள் 
மேல் ஆசை கொள்ளாதே" என்று 
கூறிவிட்டு கிளம்பினான்!

நான் அவனிடம் இருந்த 
உன்னையே பார்த்து கொண்டிருக்க 
அவனுடன் சிறிது தூரம் சென்ற நீ 
என்னை பார்த்து புன்னகையொன்றை 
உதிர்த்தாய்!

அன்று முதல் நீ 
இருந்து கொண்டுதான் இருக்கிறாய்
என்னிடம் உண்மையாகவும்
அவனிடம் பொம்மையாகவும்!   




-----செ. சுந்தரராஜன்