பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

நண்பனும், பதிவராகும் ஆசையும்....

                         நானெல்லாம் பதிவுலகில் நுழைந்ததே நண்பர்களிடம் படம் (scence ) காட்டுவதற்குத்தான், அதில் என்னை போல் ஒரு ஆர்வக்கோளாறு நண்பன் என் வலைப்பூவை மட்டுமே பார்த்துவிட்டு அவனும் வலைப்பூ தொடங்க ஆசை கொண்டான், அதற்க்கு என்னையே கற்று கொடுக்கும் குருவாக ஏற்றுகொள்வதாகவும் ஒப்புகொண்டான்.

                       ஒரு நல்ல குருவிற்கு அழகு நல்ல வழிகாட்டுதல்தானே? உடனே நான் அவனிடம் நீ என்னை மட்டும் படித்துவிட்டு பதிவுலகில் நுழைவதைவிட, என் குருமார்களையும்  படித்து தெளியவேண்டும் என்று கூறி பதிவுலகின் ஆதர்ச நாயகர்களான பரிசல். கார்கி, கேபிள், சரவணகுமரன்  போன்றோரை படிக்குமாறு கூறினேன். 

                      இரண்டொரு நாள் கழித்து வலைப்பூவை தொடங்கலாமா? என்று கேட்க , அவன் இன்னும் அவார்களை படித்து முடிக்கவில்லை என்றும் , இப்போது தனக்கு எழதும் ஆர்வத்தைவிட, படிக்கும் ஆர்வமே அதிகம் உள்ளது என்கிறான். நானும் அவனது படிக்கும் ஆர்வத்தை மெச்சிவிட்டு  அவனிடம் சொன்னேன் " மச்சி!நீ வந்துடேல்ல இனிமே கூவம் சுத்தமாய்டும் ".

                                   







புதன், 2 டிசம்பர், 2009

கும்பகோணம் பதிவர்களே! 1 நிமிடம்

இந்த தலைப்பை எழுதும் முன் நான் 1000 முறை யோசித்தேன் , கும்பகோணம் பல அறிஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி இருந்தாலும் பதிவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது சந்தேகமாவே உள்ளது.


 எனவே இந்த பதிவை படிக்கும் கும்பகோணத்தை சேர்ந்த பதிவர்கள் (நீங்க பதிவர் இல்லைனாலும் பரவாயல்லை, படிச்சா என்னை தொடர்பு கொள்ளுங்கள்). என் நண்பர்கள் யாருக்கும் blog என்ற ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை. எனவேதான் நான் நாம் நகரத்தை சேர்ந்த வலைபதிவில் ஆர்வமுள்ளவர்களை சந்திக்க விரும்புகிறேன்..


என் கைபேசி எண்: 9994916530
மின்னஞ்சல் முகவரி: sundararajanit@yahoo.


மற்ற பதிவர்கள் மன்னிக்கவும், ஆணி மலையொன்று எனக்காக காத்திருப்பதால் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை, அடுத்த பதிவுக்கு ஒரு புதிய விஷயம் பிடித்திருக்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுங்கள்....
சந்திப்போம்...
........செ.சுந்தரராஜன்....