வெள்ளி, 4 செப்டம்பர், 2009

வாங்க சிரிக்கலாம்!




நண்பர்களே!

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது நான் ரசித்த சில துணுக்குகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் படித்துவிட்டு சிரித்து மகிழுங்கள்!

தோழி பொம்மி மற்றும் சத்யாவுக்கு , இந்த வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதுவேன், எனவே அடிக்கடி புது புது செய்த்களை படிக்கலாம்...

நம்ம ஜோக்ஸ் படிச்சிட்டு மன்மோகன் சிங்கே முகத்த மூடிகிட்டே சிரிக்கிறார்!


புதுமொழிகளில் சில ...

மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.

வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?

இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.

நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.

ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.

Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.

மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.

வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.

அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும், MCA படிச்சா பொம்மி கூட progam போடுவா!


நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.

jokes


டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?

***********
டாக்டர்! என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா...
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!
***********

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...
***********

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும், எடுத்திட்டு போயிடறாங்க.
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்.
***********

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
***********

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?
***********





வியாழன், 3 செப்டம்பர், 2009

உலகின் முதல் கடவுள் பெற்றோர்தான் - நடிகர் சிவகுமார்


ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசினார்.

கோவை பேரூர் தமிழ் [^] கல்லூரியில் அருளாட்சி வெள்ளி விழா சொற்பொழிவு நிகழ்ச்சி, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் [^] சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது ...

ஒவ்வொரு மனிதனும் அடக்கத்துடன் வாழ கற்றுக் கொண்டால், மிகப் பெரிய இலக்கை எட்ட முடியும். பொறுமையை விட உயர்ந்த தவமும், கருணையை விட பெரிய அறமும் இல்லை.

மனிதர்களிடையே கருப்பு, வெள்ளை என வண்ணங்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஒற்றுமை என்ற எண்ணத்தில் வேறுபாடு இருக்கக் கூடாது.

ஒவ்வொரு மனிதனிடமும், அன்பு, கல்வி [^], நீதி, உயர்ந்த பண்பு போன்ற பழக்கங்கள் இருந்தால் சான்றோர்களால் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படுவர்.

இரண்டாம் உலகப்போரில் கோடிக்கணக்கான மக்கள் [^] கொல்லப்பட்டதற்கு காரணம், மனிதநேயமின்றி அரக்கத்தனத்துடன் நடந்த நிகழ்ச்சி என்று கூறலாம் .

இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் தலைதூக்காமல் இருக்க, சமுதாயத்தில் ஒற்றுமையும், மனிதநேயமும், மத நல்லிணக்கமும் அவசியம்.

அன்றைய காலத்தில் கஷ்டப்பட்டு பணம் செலவழித்து, சொத்துக்களை விற்று, வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு நம் நாட்டில் சேவை செய்தனர்.

ஆனால், தற்போது அரசு உதவித்தொகை, சலுகைகளை பயன்படுத்தி படித்து விட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை கவுரமாக நினைக்கின்றனர்.

நம்மை கேட்காமல் படைத்த கடவுள், நமக்கு தேவையானவற்றை உரிய நேரத்தில் நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில் கடமையை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.


காதல் பொறுக்கி!


நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?
-----செ.சுந்தரராஜன்

புதன், 2 செப்டம்பர், 2009

லேசா! லேசா!

அன்று கடற்கரையில் நடந்தது
என்னவோ நாம்
இருவரும்தான்
!

மணலில்
பதிந்தது என்னவோ என்
கால் தடம் மட்டுமே!

நீ
அவ்வளவு லேசா லேசா
நடகின்றாய் என்றேன் நான் !

லூசா நீ! நான் உனக்குள் இருக்கும் போது
மணலில் எப்படி என் கால் பதியும் என்றாய் நீ!



நான் உன்னையும் நீ என்னையும்
காதலிக்கிறோம்!

காதல் நம்மை காதலிக்கிறது!


-------------செ. சுந்தரராஜன்

நாங்கலாம் terrorல !


நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம ஆளு யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா ????.....