சனி, 10 அக்டோபர், 2009

அய்யா! ராசா!


"may i come in sir?"

"அட!mr. ராஜன் ! வாங்க , வாங்க! என்ன விஷயம்?"என்றார் production engineer.

"sir, இன்னிக்கு எங்க பாட்டியோட முதல் நினைவு நாள், so எனக்கு மதியம் ஒரு 2 hrs permisson வேணும்'.

"அடடா! என்னங்க இன்னிக்கு production எல்லாம் submit பண்ணனுமே , இன்னிக்கு வேற MD வரேன்னு சொல்லிருக்காரு , நீங்க வேணுனா நாளைக்குஎடுத்துக்குட்டு enjoy பண்ணுங்களேன்".

மனதிற்குள் (அடேய்!ரப்பர் வாயா!)"sir! leave போட்டு enjoy பண்ற விஷயமா இது?, கிடைக்கும்னா கிடைக்கும்னு சொல்லுங்க! இல்லனா say no! நான் ஒன்றும் நினைச்சிக்க மாட்டேன்" என்றேன்.

"அதான்ங்க இன்னிக்கு கிடைக்கிறது கஷ்டம், நீங்க வேணுனா நாளைக்..."

"thank you sir",மனதிற்குள் (கேட்கறப்ப permisson கொடுக்க மாட்டான், நாளைக்கி leave போட்டு enjoy பண்றதாம், யார்க்கு வேணும் இவனுங்க leave)" என்றபடியேவெளியில் வந்து ,

"அண்ணே! ஒரு kings கொடுங்க". பற்ற வைத்தேன்.

"அய்யா! ராசா! டீ குடிக்க காசு கொடுயா"என்றபடி நின்றது ஒரு கிழவி.

நான் கடுப்புடன்"வேற, வேற எங்கயாவது பாரு"

"நீ கொடுத்தா கொடு, நான் வேற யார்ட்டயும் கேட்க மாட்டேன்" என்றது அது.

"என்னடா இது வம்பா போச்சு! த்தே! சொல்றேனில்ல, வேற பாரு"

"வுடு sir, கொஞ்ச நேரத்துல அதுவே போய்டும்"கடைக்காரர்.

"ராசா! அப்ப நான் வரட்டுமா "என்றது கிழவி.

"போ, போ"என்று சொல்ல வந்த நான்"பாட்டி என்னை என்னை சொல்லிகூப்பிட்ட?".

"ராசான்னு கூப்பிட்டேன்யா, ஏன் அப்படி கூப்பிட கூடாதா?"

"எங்கே இன்னொருவாட்டி கூப்பிடு"

"ராசா" .

"டீ குடிக்க காசு வேணுமா? எவ்வளோ வேணும்?" என்றேன்.

"ம்ம் 1000 ரூபா கொடு, ஒரு 5 ரூபா இருந்தா கொடுய்யா"

"த்தே கிழவி! உனக்கு ரொம்பத்தான் ஏத்தம், அய்யா எதோ கேட்டா.."

"அண்ணே! இருங்க நான் பாத்துக்கறேன்" என்றேன் கடைக்காரரிடம்.

"இந்தா பாட்டி 10 ரூவா வச்சிக்க'

"அய்யா! ராசா! 5 ரூவா இருந்தா கொடு போதும்"

"என்ட சில்லறை இல்லை, பரவால்ல வச்சிக்க "

"இந்தயா, என்ட இருக்கு சில்லறை"என்று 5 ரூபாய் திருப்பி கொடுத்தது அந்தபாட்டி.

"பாட்டி! ஒரு நிமிஷம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க"என்று காலில்விழுந்தேன்.

"மவராசனா இருயா"என்றுவிட்டு அந்த பாட்டி போக நான் அலுவகத்திற்குள் செல்ல திரும்பினேன்.

எல்லோர் பார்வையும் என் மேல இருக்க நான் யாரையும் கண்டுகொள்ளாமல் அலுவகத்திற்குள் நுழைந்தேன்.

"மச்சான்! treat எப்படா?" என்றபடியே வேகமாக வந்தான் ரமேஷ்.

"எதுக்கு? இப்ப treat"

"உனக்கு இந்த மாசத்திலிருந்து 3500 rs increment"என்றான்.

நான் உடனே ஜன்னல் வழியே தூரத்தில் அந்த பாட்டி போவதை பார்க்க, மழைஆரம்பித்தது.



புதன், 7 அக்டோபர், 2009

அண்ணாமலை remake????


அண்ணாமலை என்ற காலத்தால் அழியாத காவியத்தை அதே இயக்குனர்மீண்டும் ஆறுமுகம் என்ற பெயரில் மறு உருவாக்கம்(remake) செய்துள்ளார். மூலகதையின் சாராம்சம் கெடாமலும், ரசிகனின் நினைவு திறனை கருத்தில்கொண்டும் காட்சிகளை உருவாக்கி ரசிகனின் இதயங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார்.(அப்பதானே இவரோட அடுத்த படத்திற்கு(அந்த நினைப்பு வேறஇருக்கா?) போகாமல் தப்பிக்கலாம்).

பில்லா remake ல் விஷ்ணு வர்தன் சில கதாபாத்திரங்களை மாற்றியமைத்துபுரட்சி செய்தது போல் சுரேஷ் கிருஷ்ணாவும் செய்துள்ளார்.

இயக்குனரின் கற்பனை திறனை பறை சாற்றும் வகையில் அண்ணாமலைக்கும், ஆறுமுகத்திற்கும் உள்ள 10 வித்தியாசங்களை பட்டியல் இடுகிறேன்.
  1. அண்ணாமலையில் ரஜினி கதாநாயகன் , இதில் பரத் என்று ஒருவர்.
  2. அதில் குஷ்பூ. இதில் ப்ரியாமணி.
  3. அதில் தங்கை வைஷ்ணவி.இதில் சரண்யா மோகன்(நான் படத்துக்குபோனதே இவங்களுக்காகதான்)
  4. அதில் ராதாரவி, இதில் ரம்யா கிருஷ்ணன்.(இயக்குனரின் தைரியத்தை நாம்பாராட்டியே ஆக வேண்டும்)
  5. அதில் சரத் பாபு , இதில் ஏதோ ஒரு அமுல் பேபி(பரவாயில்லை, சுமாராகநடிக்கிறார்)
  6. அதில் ரஜினி RayBan கண்ணாடி அணிதிருப்பார், இதில் பரத் எதோ சுமாரான கண்ணாடி.
  7. அதில் ஜனகராஜ், இதில் கருணாஸ் (அவரே தேவலாம்)
  8. குஷ்பூ குளிப்பதை(முழுதாக) ரஜினி மட்டுமே பார்ப்பார், இதில்ப்ரியாமணியை நாமும் சேர்ந்து பார்க்கிறோம்.
  9. முக்கியமான வேறுபாடு அதில் ரஜினி பால்காரர், இதில் பரத் இட்லிவிற்பவர்.(எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)
  10. ரஜினிக்கு வயதான பின்னர் climax, இதில் நமக்கு வயதாவதற்கு முன் climax (என்று நினைக்கிறேன்).
படத்தில் பரத் ஆடுவது, பாடுவது, சண்டை போடுவது , பஞ்ச் dialogue பேசுவது, செண்டிமெண்ட் காட்சிகளில் தான் அழுது நம்மையும் அழவைப்பது என ரொம்ப busy ,பாவம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் விடுங்கள்.

ப்ரியாமணி இதே போல் இன்னும் 2 இல்லை இல்லை 1 படம் நடித்தாலே Oscar award நிச்சயம்(எவ்வளவோ பண்ணிட்டோம்! இதை பண்ணமாட்டோமா?).

கடைசியாக பரத்திற்கு ஒரு எச்சரிக்கை!

நீங்கள் வேண்டுமானால் இன்னொரு ரஜினி ஆவதற்கோ , விஜய் ஆவதற்கோமுயற்சி செய்யுங்கள்.

எங்கள் அண்ணன்

இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" போல்

ஆக முயற்சி செய்வதை கை விட்டு விடுங்கள்.

ஒரு சூரியன்! ஒரு சந்திரன் என்பதை

ஒரே வீரத்தளபதி மட்டுமே இருக்க முடியும்

அது

எங்கள் அண்ணன்


இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்னது படத்து climax ஆ, இவளவையும் கேட்ட பின் இந்த படத்தின் climax பாக்கஉங்களக்கு தைரியம் இருக்கலாம், எனக்கு இல்லை. (எல்லா duet பாடல்களும்முடிந்த பின் theatre ல் நமக்கென்ன வேலை.)






ரத்தத்தின் நிறம் xxx?


விபத்தில் சிக்கி மயங்கி பின்
விழித்தவுடன் மருத்தவமனையில் இருப்பதை
உணர்பவனுக்கும்!

தங்கையின் பிரசவத்திற்கு யார்க்கும்
எளிதாக கிடைக்காத ரத்த பிரிவு
எளிதாய் கிடைத்தவனுக்கும்!

உறவினர்களே அற்ற திருமணத்தில்
மணமகனாய் இருந்தவனுக்கும்!

மழை நேரங்களில் பத்திரமாய்
வீடு திரும்பும் தந்தையின்
மகனுக்கும்!

மச்சான்!நீ என் ரத்தம்டா
என்பவனுக்கும்!

அந்த வார்த்தைகளை கேட்கும்
தகுதியுள்ள எவனுக்கும்!


ரத்தத்தின் நிறம் நட்பு!

------செ. சுந்தரராஜன்


கவிதைனா
காதலை பற்றி மட்டும்தான்(என் வரையில்) எழுதுனுமா என்று
சிந்த்திதற்கு பலன் இந்த படைப்பு. நட்பு என்றும்(எதையும்) கவிதைகளை
எதிர்பார்பதில்லை
என்றாலும், எழுத தோன்றியது!நான் நட்பை பற்றி எழுதிய முதல் கவிதை. யாரேனும்வேறெங்காவது நட்பு பற்றிய கவிதைகளை அறிந்திருந்தால் பின்னூட்டங்களில் சொல்லவும்

செவ்வாய், 6 அக்டோபர், 2009

நண்பா!


வாழ்வின் எல்லா சாபங்களையும் சந்தித்தது போல்
ஒரு வெறுப்பு, பயங்கர கடுப்பு,
ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

நம்ம மேல தான் தப்போ!. என்றெல்லாம்
சிந்தித்தபடி நான் அமர்ந்திருந்த நேரத்தில்
அங்கு வந்த என நண்பன் சொன்ன அந்த 3 வார்த்தைகள்


என் அம்மா சொன்னதை விட பெரியது!

காதலியின் வார்த்தைகளை விட இனியது !

அப்பாவின் ஆறுதலை விட மகிழ்ச்சியானது!

அது !



அது !



அது !


அது !


அது !



மச்சி நானும் பெயில்டா

திங்கள், 5 அக்டோபர், 2009

மச்சி! நீ யார் fan?

முதல் வருட கல்லூரி, முதல் நாள், ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் முடிந்தவுடன் நாங்கள் 5 பேர் ஒரே இருக்கையில் அமர்ந்தோம்.
(ஒரே இருக்கைனா ஒரே desk ).

அவன் பேச ஆரம்பித்தான், 2 ஆவதா இருந்தவனிடம்
"மச்சி! நீ யார் fan? " என்றான்.

"விஜய் மச்சி! ஏன் கேட்குற?" என்றவுடன் .

அவரை பற்றி ஒரு joke சொல்லி அந்த விஜய் ரசிகனை
(விஜய் நடிச்ச ரசிகன் இல்ல,விஜயோட ரசிகன்)
வெறுப்பு ஏற்றினான்.

பிறகு அடுத்தவனிடம் "மச்சி! நீ யார் fan? ".

அதற்க்கு அவன் மிகவும் ""தலை"க்கனத்துடன் (நல்லா கவனிங்க தல இல்லை"தலை") "அஜித்! மச்சி" என்றான்.

அதற்க்கு அவன் சொன்ன joke கேட்டவுடன் விஜயே தேவலாம் என்றாகிவிட்டது.

இப்படி எல்லாரிடமும் கேட்டு எல்லாரையும் கடுப்பாக்கிவிட்டு என்னிடம்வந்தான்.

என்னிடம் "மச்சி! நீ யார் fan? ".

நான் " இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்


நாளை மறுநாளைய உலகம்


அடுத்த அமெரிக்க அதிபர்


வெள்ளை உள்ளம்


டில்லியின் கில்லி


முகவையின் முத்து


தமிழகத்தின் சொத்து


வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்"

என்றேன்.


அவன்"இது உனக்கு தேவையா?"(வடிவேலு style ல்) என்று அவனக்கு அவனே கேட்டு கொண்டுவேறு desk க்கு ஓடிவிட்டான்.


அன்றிலிருந்து அவன் யாரிடமும் கேட்பதில்லை "மச்சி! நீ யார் fan? ".


டிஸ்கி: எப்பேர்பட்ட துன்பம், அவமானம் வந்தாலும்

அண்ணன் ஜே.கே.ரித்திஷ்

பெயரை உச்சரித்தவன் காப்பாற்றபடுவான்.


ஸ்டார்ட் மீஸீக்..

"இருந்தாக்கா அள்ளிக் கொடு

இல்லேன்னா சொல்லிக் கொடு"