சனி, 14 மே, 2011

நீ - நான்- அலைபேசி!


1)நீ!
"ம்ம்" என்று  அனுப்புவாய் என்று 
எதிர்பார்த்துகொண்டிருகும்போது
"ஹா ஹா" என்று அனுப்பி விடுகிறாய் - "ம்ம்ம்ம்" 
என்று புலம்பி கொண்டிருக்கிறேன் நான்!

2)உன் பெயர் திரையில் வரும்போதெல்லாம் 
சிவந்து விடுகிறது என் பேசி! - வெட்கமோ?
கோபமோ ? நானறியேன்!

3)உன் அழைப்புகளுக்கு நான் ஒலி வைக்கவில்லை
உன் அழைப்புகளின் போது மலர் வாசம் வீசுகிறது
என் பேசியில்!  

4) என் பேசியில் எதையும் 2 முறை அழுத்த வேண்டியிருகிறது 
என்கிறாய் நீ! - உடனே என்னையும் 
அவளிடம் கொடுத்து விடு 
என்கிறது என் பேசி!

5) நேரில் உன் பார்வைகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை
பேசியில் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை!
இருந்தும் உன் கேள்விகளுக்காகவே கிறுக்குத்தனம் செய்கிறது 
மனது!

6) உன்னிடம் பேசிய பிறகு இசை கேட்க முடிவதில்லை 
என் பேசியில்! -  ஏன் என்று கேட்டால்  
இப்போதுதானே அவள் குரல் கேட்டாய்! 
அதைவிட இனிது ஒன்றுமில்லை இந்த இசையில் 
என்கிறது! 



திங்கள், 2 மே, 2011

காதல் தேவதை பதவி!

 

உனக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகும்
வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது என் பேசியில்!

நண்பர்களின் நடுவே நான் நிற்கையில் 
நீ அழைத்தால் மகிழ்ச்சியை விட  மமதை கொள்கிறது மனது!

நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே 
இல்லை உன் பேச்சு வழக்கு!

உன் குழந்தை கோவம் காணவே - நான் 
காதல் குறும்பு செய்கிறேன்!   

உன்னை தேடி வரும்போதெல்லாம் சாலையின் 
இருபுறமும் நீயே தெரிகிறாய்!
காதல் தேவதை பதவிக்கு ஆள் எடுக்கிறார்களாம் 
உன்னை போட்டியிட சொல்லி என் உயிரை எடுக்கிறார்கள்!

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஒரு நாள் ஒரு கனவு...




அதிகாலை 3 மணி...

"என்னடா நேத்து கூப்டியா?"
   
"ஆமா அண்ணே! அப்பாட்ட சொல்லி வண்டி சாவி தர சொல்லுனே!" என்றான் தம்பி.  

"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"

"நிச்சயமா கேட்பாருன்னே".

"சரிடா, பேசி பாக்குறேன்" . 

"சரிண்ணே" .

அன்று இரவு... 


"ப்பா! பா...!"

"ம்ம்! ம்ம்"

 தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"

"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".

"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"

" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"

"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "

"நீ சொல்லித்.... "

"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?    

"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!    

வேண்டாங்க! பயமா இருக்குங்க!  

அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!  

மறு நாள் காலை 3  மணி ...

"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"

"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".     

"சரிண்ணே". ரொம்ப thanksna

குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது  என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!


புதன், 24 நவம்பர், 2010

ஒவ்வொருமுறையும் !


ஒவ்வொருமுறையும் சொல்ல நினைத்து
உன் பின்னால் வரும்போதும் 
இந்த முறை  
நண்பனின் பயமுறுத்தலுக்கும்
சகோதரனின் கேலிக்கும்
தோழியின் நகைப்புக்கும் 
ஆளாககூடாதென்று
சொல்லிவிடத்தான் நினைக்கிறது மனது!

இவர்களிடம் கத்தி திரிகிற என் காதல் 
உன் பார்வைக்கு முன் ஊமையாவதால் 
இந்த முறையும் சொல்லாமலே திரும்புகிறது 
உன்னை பின்தொடரும் என் காதல்!