புதன், 23 நவம்பர், 2011

இருநூற்றம்பது ரூபாயும், இரண்டு பீரும்

 

"எவ்ளோ மேடம்?"

"2000 ப்பா!"         

"இல்ல மேடம் எங்களுக்கு 1750  தானே,?!"

"ஆமாம் இந்த time ஒரு பேப்பர்க்கு  50 extra ஆகிட்டாங்க, கிளாஸ் க்கு circular வந்திருக்குமே? "
  
அவள் பேசிகொண்டிருக்க இருநூற்றம்பது ரூபாய் மேற்கொண்டு செலுத்த வேண்டும் என்ற வார்த்தை, என் கனவில் இடி விழுந்தது போலிருந்தது.
இப்போது அவனிடம் சென்று பணமில்லை இனொரு நாள் பார்துகொள்ளலாம் என்றால் என்ன சொல்வானென்று தெரியவில்லை.

அவனிடம் அப்போதே சொன்னேன் "மச்சான்! இதெல்லாம் வேண்டாண்டா, நீ வேணுனா போ, நா வரல டா!"

"மச்சி! பீர் அடிகிறதுலாம் இப்போ கூல் ட்ரிங்க்ஸ் சாப்டர மாறி ஆய்டுச்சு, சொம்மா பயமா இருக்குன்னு சீன் போடாத!"
  
கோபால் எப்பவும் இப்படித்தான், அவனிடம் தெரியாமல்  "பீர் எப்டிடா இருக்கும்" என்று  கேட்டது தவறா? இல்லை இன்று வரை பீர் குடிக்காமல் இருந்தது என் தவறா? என்று தெரியவில்லை... அவன் பேசியே என் மனதை மாற்றிவிட்டான் என்று சொல்வதைவிடவும், நான் பீர் குடிக்க அவன் பேச்சினை ஒரு காரணமாக வைத்து கொள்ள என் மனம் அறிவுத்தியது, பின்னர் ஏதானும் பிரச்னை என்றால் இது  ஒரு சிறந்த காரணமாக இருக்கும்... 

"ok  மச்சி! பீரடிக்க எவ்ளோடா செலவாகும்?"  

"சாதாரணமா டாஸ்மாக் ல அடிக்கலாம்ன உனக்கு செரிபட்டுவராது . ம்ம் எதாவது நல்ல பார் க்கு போய்டுவோம், மச்சான்! என்ன ஒரு 250  ரூபா ஆவும்டா!"

"என்னது? ஒரு பீர் 250 ரூபாவாடா?"  

" இல்லடா, ரெண்டு பீர், அப்புறம் எனக்கு யார் தருவா?"

" டேய்! நான் ஒன்னு முழுசா குடிக்கமாட்டேன்டா"

"தெரியும் மச்சி! நீ முடிஞ்சவரைக்கும் அடி மீதி இருந்தா நான் பாத்துக்குறேன்"

"நாயே! உன் கல்யாணத்துக்கு நான் அய்யர் ஆ?, சரி amount  க்கு என்ன பண்றது?"
"அதான் எக்ஸாம் வருதுல, பீஸ் ஒரு 250 ரூபா  ஏத்திட்டாங்கன்னு சொல்லி வாங்குடா, பாத்துக்கலாம்"

"டேய்! வீட்டுல எப்டிடா பொய் சொல்றது? நா சொன்னதே இல்லடா"   

"அப்டினா, பீரடிக்க போறேன்னு சொல்லி கேட்கவேண்டியதுதான?, லூசு குடிகாரன் ஆய்ட்ட அப்புறம் என்ன சொம்மா செண்டிமெண்ட்"

"டேய்! இதெலாம் செரியா வரும்னு எனக்கு தோணல"    

"அதெல்லாம் வரும் டா, சும்மா இருந்த என்ன  உசுபேத்திட்டு இப்ப ஏமாத்திடாத டா, பீஸ் கட்றோம், பீர் அடிக்கறோம், அவ்ளோதான்."  

அவன் சொன்ன மாதிரியே அம்மாவிடம் பீஸ் அதிகமாகிவிட்டது என்று பணம் கேட்டபோது, ஒரு வார்த்தை கூட கேட்காமல் தந்தாள், அப்போதே எனக்கு உண்மையை சொல்லி விடலாம் போல இருந்தது, இந்த பாழாய் போன பீர் கண்முன் ஆடியவுடன் ஒன்று சொல்லாமல் வந்து விட்டேன், இங்கு பணம் செலுத்துமிடத்தில் உண்மையிலே பீஸ் அதிகமாகிவிட்டதை அறிந்தபோது எனக்கு மயக்கமே வந்து விட்டது.நேரே சென்று கோபாலிடம் காட்டு காட்டென்று காட்டிவிட்டு வீட்டுக்கு நுழைந்தேன்.    

அம்மா இல்லை, வெளிய சென்றிருந்தவள் அபோதுதான் வந்தாள் . வந்தவள் நேரே என்னிடம் வந்து 

"இந்தா ராஜா, இந்தா 250 ரூபா" 

எனக்கு தூக்கிவாரி  போட்டது, ஒருவேளை எல்லாம் தெரிந்திருக்குமோ என்றேண்ணியவாறு


"எதுக்குமா? ஏது இந்த பணம்?"

"3000  சீட்டு போட்ருந்தண்டா, எனக்கு விழுந்துச்சு இந்த தடவ, அதுல தான் இது, காலேஜ் போற புள்ள,எதாவது செலவு இருக்கும், திடிர்னு ஒரு செலவு, இல்ல பசிக்குது, யார கேட்கமுடியும்?, அதான் வச்சிக்........."

அவள் பேசிகொண்டிருந்தாள், எனக்கு உடனே ஒரு பீர் அடித்துவிட்டு அவள் மடியில் படுத்து அழ வேண்டும் போலிருந்தது.          



சனி, 14 மே, 2011

நீ - நான்- அலைபேசி!


1)நீ!
"ம்ம்" என்று  அனுப்புவாய் என்று 
எதிர்பார்த்துகொண்டிருகும்போது
"ஹா ஹா" என்று அனுப்பி விடுகிறாய் - "ம்ம்ம்ம்" 
என்று புலம்பி கொண்டிருக்கிறேன் நான்!

2)உன் பெயர் திரையில் வரும்போதெல்லாம் 
சிவந்து விடுகிறது என் பேசி! - வெட்கமோ?
கோபமோ ? நானறியேன்!

3)உன் அழைப்புகளுக்கு நான் ஒலி வைக்கவில்லை
உன் அழைப்புகளின் போது மலர் வாசம் வீசுகிறது
என் பேசியில்!  

4) என் பேசியில் எதையும் 2 முறை அழுத்த வேண்டியிருகிறது 
என்கிறாய் நீ! - உடனே என்னையும் 
அவளிடம் கொடுத்து விடு 
என்கிறது என் பேசி!

5) நேரில் உன் பார்வைகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை
பேசியில் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை!
இருந்தும் உன் கேள்விகளுக்காகவே கிறுக்குத்தனம் செய்கிறது 
மனது!

6) உன்னிடம் பேசிய பிறகு இசை கேட்க முடிவதில்லை 
என் பேசியில்! -  ஏன் என்று கேட்டால்  
இப்போதுதானே அவள் குரல் கேட்டாய்! 
அதைவிட இனிது ஒன்றுமில்லை இந்த இசையில் 
என்கிறது! 



திங்கள், 2 மே, 2011

காதல் தேவதை பதவி!

 

உனக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகும்
வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது என் பேசியில்!

நண்பர்களின் நடுவே நான் நிற்கையில் 
நீ அழைத்தால் மகிழ்ச்சியை விட  மமதை கொள்கிறது மனது!

நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே 
இல்லை உன் பேச்சு வழக்கு!

உன் குழந்தை கோவம் காணவே - நான் 
காதல் குறும்பு செய்கிறேன்!   

உன்னை தேடி வரும்போதெல்லாம் சாலையின் 
இருபுறமும் நீயே தெரிகிறாய்!
காதல் தேவதை பதவிக்கு ஆள் எடுக்கிறார்களாம் 
உன்னை போட்டியிட சொல்லி என் உயிரை எடுக்கிறார்கள்!

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஒரு நாள் ஒரு கனவு...




அதிகாலை 3 மணி...

"என்னடா நேத்து கூப்டியா?"
   
"ஆமா அண்ணே! அப்பாட்ட சொல்லி வண்டி சாவி தர சொல்லுனே!" என்றான் தம்பி.  

"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"

"நிச்சயமா கேட்பாருன்னே".

"சரிடா, பேசி பாக்குறேன்" . 

"சரிண்ணே" .

அன்று இரவு... 


"ப்பா! பா...!"

"ம்ம்! ம்ம்"

 தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"

"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".

"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"

" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"

"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "

"நீ சொல்லித்.... "

"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?    

"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!    

வேண்டாங்க! பயமா இருக்குங்க!  

அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!  

மறு நாள் காலை 3  மணி ...

"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"

"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".     

"சரிண்ணே". ரொம்ப thanksna

குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது  என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!


புதன், 24 நவம்பர், 2010

ஒவ்வொருமுறையும் !


ஒவ்வொருமுறையும் சொல்ல நினைத்து
உன் பின்னால் வரும்போதும் 
இந்த முறை  
நண்பனின் பயமுறுத்தலுக்கும்
சகோதரனின் கேலிக்கும்
தோழியின் நகைப்புக்கும் 
ஆளாககூடாதென்று
சொல்லிவிடத்தான் நினைக்கிறது மனது!

இவர்களிடம் கத்தி திரிகிற என் காதல் 
உன் பார்வைக்கு முன் ஊமையாவதால் 
இந்த முறையும் சொல்லாமலே திரும்புகிறது 
உன்னை பின்தொடரும் என் காதல்!   

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உன் அழகும்! என் காதலும்!

 

முதல் நாள்  பள்ளி  செல்லும் 
குழந்தையை போல அலறி துள்ளி குதிக்கிறது
உன் அழகு!
வேலையிருந்து ஓய்வு பெறுபவனின் 
கடைசி நாளை போல் மௌனபட்டு கிடக்கிறது 
என் காதல்!

நண்பனின் பிறந்தநாள் மகிழ்ச்சியை 
போல் அமர்களபடுகிறது
உன் அழகு!
நண்பனின் மரணத்தை போல் 
கலக்கம் கொள்கிறது 
என் காதல்!


காதலிக்கு தரும் ஒற்றை ரோஜாவை 
போல தனித்து நிற்கிறது 
உன் அழகு!
இறுதி சடங்கில் நசுங்கிவிடும் 
பூவை போலஆகிவிடுகிறது 
என் காதல்!

சிறுமி, காதலி, மனைவி, தாய், கிழவியாகி 
இறந்து விடுகிறது 
உன் அழகு!
இன்னும் பிரசவமாகாத கர்ப்பமாகதான்
இருக்கிறது 
என் காதல்!

 

சனி, 17 ஜூலை, 2010

இப்ப நான் என்ன செய்ய?

                             1 Message received என்று என் மொபைல் போனில் வந்தவுடன் நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று வந்திருந்தால் நிச்சயமாக அது அவன்தான் "ரமேஷ் ". அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி இதுவாகதான் இருக்கும் "I m ready. r u ready?".
                          அவன் எப்போதும் அப்படித்தான், நாங்கள் எங்கேனும் செல்வதாக இருந்தால், நான் கிளம்பிவிட்டனா என்று என்னிடமிருந்து வேகமான பதிலை பெறுவதற்காக தொடந்து 10 செய்திகளை அனுப்புவான்.
                          இன்று நான் கிளம்பி வாசலுக்கு சென்ற பிறகும் கூட அவனது செய்திகளை காணவில்லை. அப்போதுதான் என் மொபைல் போனில் "Govalu calling..." என்று வந்தது, அட! மிஸ்ட் கால் தர கூட பாலன்ஸ் இல்லை என்பவன் இன்று கால் செய்கிறானே என்று எடுத்தவுடன் அவன் சொன்னான்.
                            "மச்சி! ரமேஷ் முதல்ல போய் டிக்கெட் எடுக்க போறேன் சொல்லி கிளம்பி போனவன், போற வழியிலே ஆக்சிடென்ட் ஆகி ஹெல்மெட் போடததனாலே தலையிலே அடிப்பட்டு ஸ்பாட்லேயே போயடண்டா, நீ சீக்ரம் கிளம்பி வா மச்சி". 
                          இப்போது மீண்டும் 1 Message received என்று என் மொபைல் போனில் வந்தது, நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று கொட்டி தீர்த்து விட்டது.அவன்தான்,விபத்திற்கு முன் அவன் அனுப்பிய செய்தி இப்போதுதான் என் மொபைலில் டெலிவரி ஆகிறது.. இப்போது அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி  இதுதான் "Me going first, u follow me must"
                           நான் அவனை பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன், நீங்களே சொல்லுங்கள் , இப்போ நான் ஹெல்மெட் போடவா? வேண்டாமா?  
                    

புதன், 7 ஜூலை, 2010

விஜய் டிவியும் , செம்மொழி பாடலும்!

              சென்ற மாதம் முழுதும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்ட செம்மொழி மாநாட்டு  மைய்ய நோக்கு பாடலை கண்டுகளிக்கும் போது , என் அபிமானத்திற்குரிய கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுடய சிந்தனை திறத்தை மெச்சி கொண்டிருந்தேன்.

                இப்போது பிரச்சினை ஒன்றுமில்லை . மாநாட்டு மயக்கமெல்லாம் தீர்ந்த பிறகு ஒரு நாள் விஜய் டிவி பார்த்து கொண்டிருந்த போது அவர்களின் பாடலை ஒளிப்பரப்ப, அதை பார்த்த எனக்கு எங்கோ ஒரு மின்னல் வெட்டியது . அது தற்செயலாகவும் இருக்கலாம்  அல்லது அதிலிருந்து இயக்குனருக்கும் ஒரு மின்னல் வெட்டிருக்கலாம் . அந்த இரு பாடல்களை நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் மின்னல் வெட்டலாம் .

மு.கு: விஜய் டிவி பாடல் செம்மொழி பாடல்க்கு முன்பே எடுக்கபட்டுவிட்டது   .


விஜய் டிவி பாடல்


செம்மொழி பாடல்




புதன், 30 ஜூன், 2010

நண்பனும், பதிவராகும் ஆசையும்....

                         நானெல்லாம் பதிவுலகில் நுழைந்ததே நண்பர்களிடம் படம் (scence ) காட்டுவதற்குத்தான், அதில் என்னை போல் ஒரு ஆர்வக்கோளாறு நண்பன் என் வலைப்பூவை மட்டுமே பார்த்துவிட்டு அவனும் வலைப்பூ தொடங்க ஆசை கொண்டான், அதற்க்கு என்னையே கற்று கொடுக்கும் குருவாக ஏற்றுகொள்வதாகவும் ஒப்புகொண்டான்.

                       ஒரு நல்ல குருவிற்கு அழகு நல்ல வழிகாட்டுதல்தானே? உடனே நான் அவனிடம் நீ என்னை மட்டும் படித்துவிட்டு பதிவுலகில் நுழைவதைவிட, என் குருமார்களையும்  படித்து தெளியவேண்டும் என்று கூறி பதிவுலகின் ஆதர்ச நாயகர்களான பரிசல். கார்கி, கேபிள், சரவணகுமரன்  போன்றோரை படிக்குமாறு கூறினேன். 

                      இரண்டொரு நாள் கழித்து வலைப்பூவை தொடங்கலாமா? என்று கேட்க , அவன் இன்னும் அவார்களை படித்து முடிக்கவில்லை என்றும் , இப்போது தனக்கு எழதும் ஆர்வத்தைவிட, படிக்கும் ஆர்வமே அதிகம் உள்ளது என்கிறான். நானும் அவனது படிக்கும் ஆர்வத்தை மெச்சிவிட்டு  அவனிடம் சொன்னேன் " மச்சி!நீ வந்துடேல்ல இனிமே கூவம் சுத்தமாய்டும் ".

                                   







திங்கள், 21 ஜூன், 2010

நீ...

நீ
இருக்கும் நம்பிக்கையில்தான் 
அமாவசை அன்று நிலவு 
விடுப்பு எடுத்துகொள்கிறது!

நீ 
படிப்பாய் என்றுதான் 
வாரம் தவறாமல் 
வார இதழ்கள் வெளிவருகின்றன!

நீ
இடுவாய் என்றுதான் 
சுண்ணாம்புக்கல் கோலமாவாக 
உடைகிறது!

நீ 
தரும் மணமே 
போதுமென்றுதான் காகித பூ 
மணம் வீசுவதில்லை!

நீ  
காதலிப்பாய் என்றுதான் 
நானும் கூட 
காத்திருக்கிறேன்! 
 .....செ.சுந்தரராஜன்....

சனி, 12 ஜூன், 2010

யாரடி நீ?



யாரடி நீ?

என் இருவிழிகளொன்றும் குருடில்லையே!

எங்கிருந்தாய் நீ?

நான் இதுவரை உன்னை கண்டதில்லையே!



பேருந்தின்  ஜன்னலோரங்களில் அமர்ந்து

நான் தேடுவது உனைத்தான் என்று

உன்னை பார்க்கும்வரை நான் அறியவில்லையே!




உறவினர்களின்  திருமண புகைப்படங்களில்

தேடி! தேடி! நான் பார்த்த பெண்களில்

சத்தியமாக நீயில்லையே!



கல்லூரி தோழிகளில் நீயிருக்க வாய்ப்பில்லை!

அவர்களின் தோழியாகவது இருந்திருப்பாயா?

என்று எனக்கு தெரியவில்லையே!



இவைகளில் நீ இல்லாதது

என்னுடன் மணமேடையில் மணபெண்ணாக

இருக்க போவதற்குத்தான் என்பதில்

எனக்கொன்றும் மறுப்பில்லையே!




என் காதலியே!

எப்படியும் நீ ஆகிவிட வேண்டும்

என் மனைவியே!

இதில் உனக்கொன்றும் மறுப்பில்லையே?



.........செ. சுந்தரராஜன்.......  

சனி, 6 பிப்ரவரி, 2010

மீண்டு(ம்) வந்தேன்!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். இத்தனை நாளாய் நான் ஒரு வளர்ந்து வரும் ஒரு பதிவர்( சொல்லிகிட்டாங்க) என்னால் எழுதமுடியாமல் போனது துரசிர்ஷ்டம்தான்(எங்களுக்கு அதிர்ஷ்டமாச்சே). ஆனால்  இனிமேல் தொடர்ந்து எழுத முயற்ச்கிறேன். 
உங்கள்  ஆதரவை வேண்டுகிறேன் . மீண்டும்  ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். 
நன்றி!
      
----செ. சுந்தரராஜன்----

புதன், 2 டிசம்பர், 2009

கும்பகோணம் பதிவர்களே! 1 நிமிடம்

இந்த தலைப்பை எழுதும் முன் நான் 1000 முறை யோசித்தேன் , கும்பகோணம் பல அறிஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி இருந்தாலும் பதிவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது சந்தேகமாவே உள்ளது.


 எனவே இந்த பதிவை படிக்கும் கும்பகோணத்தை சேர்ந்த பதிவர்கள் (நீங்க பதிவர் இல்லைனாலும் பரவாயல்லை, படிச்சா என்னை தொடர்பு கொள்ளுங்கள்). என் நண்பர்கள் யாருக்கும் blog என்ற ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை. எனவேதான் நான் நாம் நகரத்தை சேர்ந்த வலைபதிவில் ஆர்வமுள்ளவர்களை சந்திக்க விரும்புகிறேன்..


என் கைபேசி எண்: 9994916530
மின்னஞ்சல் முகவரி: sundararajanit@yahoo.


மற்ற பதிவர்கள் மன்னிக்கவும், ஆணி மலையொன்று எனக்காக காத்திருப்பதால் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை, அடுத்த பதிவுக்கு ஒரு புதிய விஷயம் பிடித்திருக்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுங்கள்....
சந்திப்போம்...
........செ.சுந்தரராஜன்....


      

புதன், 18 நவம்பர், 2009

ஒரு பாடல்! ஒரு விளம்பரம்!ஒரு நிகழ்ச்சி!

அந்த அடை மழை நாளில் தொலைகாட்சி என் கைகளில் சிக்கிய வேளையில் சட்டென்று ஒரு சேனலில் என் பார்வை நின்றது.  ஈரம் படத்தின் பாடல் அது, நிஜ மழை தந்த கடுப்பையெல்லாம் அந்த பாடலில் படமாக்கப்ட்டிருந்த மழை மறக்க வைத்தது. பெரும்பாலும் நீங்கள் அந்த பாடலை பார்த்திருக்க கூடும் எனினும் இதோ என் மகிழ்ச்சிக்காகவும் உங்களுக்காக....



---------------------------------------------------------------------------------------
ஹிரித்திக் ரோசஹ்னக்கு என்ன வயது இருக்கும் என்று தெரியவில்லை! என்னமாய் ஆடுகிறார் மனிதர். அந்த  புதிய ரிலையன்ஸ் விளம்பரதைதான் சொல்கிறேன் . இசையும் ஒளிப்பதிவும் ச்சே!வாய்ப்பே இல்லை . நான் முதலில் இந்த விள்மபரத்தின் இசையை மட்டுமே கெட்டு கொண்டிருந்தேன் . இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அந்த எலிகளாக மாறும் விஷயங்கள் என்னவென்று புரிகிறதா ? (புரிந்தவர்கள் பின்ன்டூங்களில் சொல்லுங்கள்)ஹோட்ஸ் ஆப் ஹிரித்திக் .

----------------------------------------------------------------------------------
விஜய்  டிவியில் மாலை 6.30 க்கு நாங்கதான் சூப்பர் ஸ்டார்ஸ் என்று ஒரு சீரியல் ( என்று நினைக்கிறேன்), அதில் ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் ஒரு தந்தையின் மன நிலையையும், அதற்க்கு பிறகு அவரிடம் மாற்றத்தை உணரும் அந்த சிறுமியின் மன நிலையையும் மிக எதாதார்தமாக படமாக்கி இருந்தனர். அருமை, முடிந்தால் நீங்களும் (ஒரு நாள் மட்டும்) பாருங்கள்....
---------------------------------------------------------------------------------
ரொம்ப  நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன், வோட்  போடுங்கப்பா!


...............செ.சுந்தரராஜன்..............

செவ்வாய், 10 நவம்பர், 2009

வர்ட்டா! வர்ட்டா! வர்ட்டா!என் ஊரே வர்ட்டா!

             என் திண்டுக்கல் வாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த வேலை முடிந்ததால் மீண்டும் கும்பகோணத்திற்கே செல்கிறேன். நினைத்து பார்த்தால் திண்டுக்கல் என் வாழ்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை அளித்திருக்கிறது.  நான் வலைபதிவு உலகிற்க்குள் நுழைந்ததே இங்கு வந்த பிறகுதான்.என்னதான் ஊருக்கு செல்வதை நினைத்து மகிழ்ந்தாலும் இங்கு கிடைத்த நண்பர்கள் லெனின், ஆண்டோ, விஜயகுமார் (வழக்கறிஞர்) எல்லாரையும் (யப்பா! எல்லார் பேரையும் போட்டாச்சு) விட்டு செல்வதை நினைக்கையில் மனது கனத்து போகிறது.    
-----------------------------------------------------------------------------------------------
                  திண்டுக்கல்லில்  இருந்த வரையில் (இன்று வரை) அண்ணனின் வீட்டில் தங்கி இருந்ததால், அவரின் பெண் குழந்தை k.g - II படித்து கொண்டிருக்கிறாள். அவளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட நான் செல்வது வழக்கம், தினமும் ஏதாவது ஒரு விசயத்திற்காக   என்னிடம் சண்டையிடும் அவள், நான் ஊருக்கு செல்வது அறிந்ததாலோ என்னவோ இன்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். அவளின் புன்னகை என்னை இங்கே இருக்க சொல்கிறதா? அல்லது நான் ஊருக்கு போவதிற்காக மகிழ்ச்சியா? தெரியவில்லை. ஆனாலும் அவளின் புன்னகை..
பெரியவர்கள் புன்னகைக்கும் போது அழகாக தெரிகிறார்கள்.
குழ்ந்தைகள்  புன்னகைக்கும்  போது புன்னகை அழகாக இருக்கிறது...         

இது அவள் இல்லை 
------------------------------------------------------------------------------------------------------    
 இனி தொடர்ந்து பதிவு எழுவது கொஞ்சம் கடினம்தான், முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ( ஏன்? நாங்க சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா?). நேரம் கிடைத்தால் உடனே வலைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.  எனவே அடுத்த பதிவுக்கு சிறிது நாள் ஆகலாம், உங்கள் பின்னூடகளுக்கு பதிலளிக்க நேரமானால் யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் (என்னமோ பின்னூட்டமா கொட்ற  மாதிரி).


மீண்டும் சந்திக்கலாம்



இது நான் தாங்க! 
--------செ.சுந்தரராஜன்--------


திங்கள், 9 நவம்பர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! ஸ்ரீ பெரும்புதூர்

             நான் சென்னையில் இருந்த அந்த ஆறு மாத காலத்தில் எனது வார இறுதி நாட்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர் ஆக்ரமித்து கொண்டது, எனது மற்றொரு அத்தை இங்குதான் உள்ளார். நான் ரசிக்கும் ஊர்களில்  இந்த ஊர்க்கென்று தனி இடமுண்டு. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் ஊரினை (ஊருக்கு வெளியிலதான், காஞ்சிபுரம் செல்லும் வழி) ஆக்ரமித்திருந்தாலும் அமைதியான ஒரு நகரம் (??).
ஸ்ரீ பெரும்புதூர்
             பொதுவாக பெரிய ஊர்தான் என்றாலும் நல்ல வளர்ச்சியடைந்த, எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு கிராமம் போன்றுதான் காட்சியளிக்கிறது. என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதற்குள் இந் நகரின் வளர்ச்சியை நினைத்தால்!!!!
 வரலாறு 

                     மேற்கண்ட படத்திலுள்ளது போல் விஷ்ணு பக்தர் ராமானுஜர் அவதரித்த இடம் என்பது மட்டுமே தெரியும், மற்றபடி தோற்றம் தெரியவில்லை. நிறைய திரைப்படங்களில் வருகிறது ராமானுஜர் கோவில் குளம், முக்கியமாக கே.எஸ்.ஆர் படங்களில்.     

சிறப்பம்சங்கள் 
                                     ஸ்ரீ பெரும்புதூர் என்றதும் நினைவுக்கு வருவது முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் என்பது சற்றே வருந்த கூடிய விஷயம்தான். எனினும் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நினைவிடத்தின் பராமரிப்பு அசர வைக்கிறது. நீங்கள் உள்ளே எங்கேனும் ஒரு சிறிய காகித துண்டினை கூட கண்டெடுக்க முடியாது.அவ்வளவு சுத்தம். (நான் கொண்டு குப்பை போட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால்,1. உள்ளே நுழைந்தவுடன் குப்பை போடும் ஆசை உங்களுக்கே போய்விடும்!
2.வெளியில் துப்பாகியுடன் இரண்டு பேர் உங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுவர்)..
 ராஜீவ் காந்தி நினைவிடம் சில புகைப்படங்கள்

 


                                      ஸ்ரீ பெரும்புதூரின் மற்ற சிறப்பம்சங்கள் என்றால் உலகளாவிய நிறுவனங்களின் கிளைகளும், ராமானுஜர் கோவிலும் தான்...
கோவில்கள்
                                      இங்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் ராமானுஜர் கோவில்தான் புகழ் பெற்றது. இக்கோவிலும் நிறைய திரைபடங்களில் வந்திருக்கிறது, நல்ல பெரிய கோவில். விஷ்ணு ஸ்தலம்...


   
  மக்கள்
                      இவ்வூரில் நிறைய பேர் தெலுங்கு பேசுபவர்கள், வீட்டை விட்டு வெளியே நிற்பவர்களை பார்ப்பது அபூர்வம்.யாருடனும் வீணாக பேசி பொழுதை கழிப்பதில்லை , ஆனால் அதற்காக எதாவது கேட்டால் கூட 5 நிமிடம் யோசித்து விட்டே பதில் சொல்கிறார்கள். கையில் நிறைய காசு வைத்திருந்தாலும் மேலும் எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனை உடையவர்கள்.
                  கொரிய தேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் கொரிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.(t.nagar bus stand லிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்களில் குறைந்தது 10 கொரிய நாட்டினர் இருப்பார்கள்).
பொருளாதாரம்
                              நிறைய திருமணமாகத வெளியூர்  இளைஞர்கள் இருப்பதால் பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். ஒரளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும் ஏழைகள் நிறைய உண்டு.


                                         நேரமிருந்தால் சென்னைவாசிகள்   கடற்கரைக்கும், city centre க்கும் போவதை விட  ஸ்ரீ பெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தையும், அதன் சுத்தத்தையும் அமைதியும் அனுபவித்து விட்டு வாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்.( அனேகமாக திண்டுக்கல்)
..............செ. சுந்தரராஜன்...........    









வெள்ளி, 6 நவம்பர், 2009

வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு!

"உன் கை விரல்கள் மெல்ல மெல்ல button அமுக்கி! உன் இனிமையான குரலில்..." 

சொல்லு  ரமேஷ்!

ம்! என்னடா பண்ணிட்டிருக்க?

office ல தான் இருக்கேன் சொல்லு

இல்ல சும்மாதான் போட்டேன், நல்லா இருக்கியா?

ம்! இருக்கேண்டா! எதாவது படம் பாத்தியா?

ஆமாண்டா! "கண்டேன் காதலை"பார்த்தேன், பரவால்ல பாக்கலாம்!
 
படம் இருக்கட்டும்! போற போக்க பாத்த தமன்னா படம் ஒன்னு வுடாம இவங்க்ய்ளே வாங்கிடுவாங்க போல

நீ ஒன்னு! இனிமே எல்லா படத்தையும் இவங்க வாங்கிடுவாங்க போல, வாங்கலனாலும்  நம்ம ஆளுங்க c.m ட்ட சொல்லி போராட்டம் பண்ணியாவது வாங்க வச்சிடுவாங்க போல இருக்குடா!

அது சரி! எல்லா படத்தையும் இவங்களே வாங்கின எப்படிடா விளம்பரம் பண்ணுவாங்க?

அவங்க அதுக்குனே  தனி channel கூட ஆரம்பிப்பாங்க! 

ங்கொய்யால! வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு! வைடா phone அ! office time ல disturb பண்ணிக்கிட்டு!

புதன், 4 நவம்பர், 2009

பிடித்தவர் & பிடிக்காதவர் - 10 (நோ! உள் குத்து)

  கார்கியே என்னை தொடர அழைக்குமளவுக்கு நான் நல்ல (பிரபல)  பதிவரா? எனக்கே சந்தேகம்தான். நானும் வலைப்பதிவு உலகிற்கு வந்த நாளிலிருந்து என்னை யாரும் இந்த மாதிரி அழைக்க மாட்டார்களா ? என ஏங்கியது உண்டு என்பதை நான் இங்கே சொல்ல மாட்டேன். any way நன்றி கார்கி.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

......................................................

பதிவுக்கு செல்லலாம்....
1.அரசியல் தலைவர் 
      பிடித்தவர் :ப. சிதம்பரம் 
      பிடிக்காதவர்: தொல். திருமாவளவன் 
2.எழுத்தாளர்  
     பிடித்தவர் : எஸ். ராமகிருஷ்ணன்
     பிடிக்காதவர்: ஜெயகாந்தன்
3.கவிஞர்
     பிடித்தவர் : தபு சங்கர்
     பிடிக்காதவர்: வைரமுத்து
4.இயக்குனர்  
      பிடித்தவர் : கௌதம்  வாசுதேவ்  மேனன்
      பிடிக்காதவர்: பாலா
5.நடிகர்
      பிடித்தவர் : கமல்
      பிடிக்காதவர்: ஸ்ரீ காந்த்
6.நடிகை
      பிடித்தவர் : பூனம் பஜ்வா
      பிடிக்காதவர்: ப்ரியாமணி
7. தொழிலதிபர்
      பிடித்தவர் : சக்தி மசாலா( பெயர் தெரியலைங்கோவ்) 
    பிடிக்காதவர்: நாட்டுல இந்த தொழிலதிபனுக தொல்லை தாங்க முடியலை. பூ விக்கிரவனிலிருந்து புண்ணாக்கு விக்கிறவன் வரைக்கும் எல்லாரும்  தொழிலதிபர்.
8 . பத்திரிகையாளர்
     பிடித்தவர் : ஆனந்த விகடன்
     பிடிக்காதவர்: குங்குமம்
9. பதிவர்
     பிடித்தவர் : பரிசல்காரன்
     பிடிக்காதவர்: சாரு நிவேதா 
10. நகைசுவை நடிகர்:
    பிடித்தவர் : சந்தானம்
    பிடிக்காதவர்: விவேக்

இதைத் தொடர நான் அழைப்பது:






திங்கள், 2 நவம்பர், 2009

நாலு...., ஐந்து....,ஆறு....


நான் பொதுவாக வெளியூர்க்கு செல்லும் நேரங்களில், இரவு நேரமென்றால் பேருந்திலோ, பகல் என்றால் ரயிலிலோ  முன்பதிவு செய்துதான்  செல்லுவேன். ஆனால் என்ன செய்ய?   (விதி வலியது) திண்டுகலிருந்து கும்பகோணத்திற்கு முன் பதிவு கேட்டாலே ஏற, இறங்க பார்கின்றனர். எனவே வேறு வழியில்லாமல் திருச்சி சென்று மாறி செல்லலாம் என்று திருச்சி வண்டியில் ஏறி இடம் பிடித்து விட்டேன். 

உள்ளே இருந்தவர்கள் எல்லாம் bar இலிருந்து நேரே வந்தவர்கள் போலும், நல்ல (!?!?!?!) வாசனை. விதியை நொந்தவாரே  தூங்கலாம் என்று கண் முடி சிறிது நேரத்தில் "புறப்படடா தம்பி புறப்படடா" என்று தாய் மீது சத்தியம் செய்த hero ஆரம்"பிக்க". (யார் அந்த hero என்று கேட்பவர்கள் முழுதாக படித்துவிட்டு கீழே வரவும்).


"புறப்படுபவர் சாலையில் ஓட்ட வேண்டிய குதிரையை  என் காதுக்குள் ஓட்ட ஆரம்பித்தார். எனக்கோ சரியான கடுப்பு மேலோங்க நான் அதே கடுப்புடன் conductor ஐ அழைத்து சத்தத்தை குறைக்க சொன்னேன். அதற்க்கு அவர் சொன்னார் 

"sound அ குறைச்சா driver தூங்கிடுவார் sir" என்றார்.

அப்புறமென்ன "தூங்கிடுவாரா?  ரொம்ப பயமுறுத்துராங்க்ய்களே என்னையே"   என்றவாரே முழித்திருந்து ஊர் போய் சேர்ந்தேன்.   
----------------------------------------------------------------------------

கூகிள் தேடு பொறியில் நம் வசதிக்காக அந்தந்த இந்திய மாநில மொழியில் தேடும் வசதி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.


நானும் அதிக தமிழ் ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் தேடலாமென்று தமிழ்க்கு மாற்றி முதல் எழுத்தை தட்டச்சு செய்தவுடன் வந்த suggestion களை பார்த்தவுடன் அந்த முடிவை கை விட்டு விட்டேன். நமது மொழி இணையத்தில் எந்தளவுக்கு பயன்படுகிறது என்று நீங்களும் பாருங்களேன். 

முக்கியமான விஷயம் நீங்கள் இதை முயற்சிக்கும் போது உடன் யாரும் இல்லாத நேரத்தை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் நான் பட்ட சங்கடத்தை    நீங்களும் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------

 அந்த தாய் மீது சத்தியம் hero இவர்தான்.





























song bonus... (யான் பெற்ற இன்பம்) 


டிஸ்கி: அதென்னப்பா எல்லாரும் ஒன்.. டூ.. த்ரீ... அப்டின்னு தலைப்பு வைகிறீங்க. நான் கொஞ்சம் வித்தியாசமானவன்..