சனி, 29 ஆகஸ்ட், 2009

காதல் அன்றி வேறரியோம் !


உன் ஒற்றை பார்வைக்காக
உறக்கமின்றி
உன் பின்னாலே
தொடரும் காலங்களில்
என் செவிகளில் உன் சிரிப்பொலி
மட்டும் கேட்கும்
என்
விழிகளில் உன் பிம்பம்
மட்டும் தெரியும்
ஆனால்
உனக்கோ
என்னை தவிர மற்றவை
மட்டுமே
தெரிகிறது!
என
என் நண்பர்கள் சொல்ல கேட்டு
சிரித்தேன்!
பைத்தியமாடா உனக்கு? என்று
அவர்கள்
கேட்டபோது - ஆமாம் அவள் மீது !
என
பதில் சொல்ல தெரிந்த
எனக்கு !!!
அதையே நீ கேட்ட போது சொல்வதற்கு என்னிடம் பதிலே இல்லை !
------செ.சுந்தரராஜன்

கருத்துகள் இல்லை: